திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது! நாகர்கோவில், மன்னார்குடியில் பாஜகவினர் போராட்டம்
நாகர்கோவில்: திருப்பரங்குன்றத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து நாகர்கோவில், மன்னார்குடியில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் எம்.ஆர் காந்தி உள்பட 20 க்கும் மேற்பட்ட பாஜகவினர், திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து, நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து, அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.காந்தி உள்பட 20 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியிலும், நயினார் நாகேந்திரன் கைது சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications