Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் சாவுக்கு பாஜக நிர்வாகி ரமேஷ் காரணம்.. ஓட்டலில் தூக்கில் தொங்கிய உரிமையாளர்.. பாய்ந்த வழக்கு

பாஜக நிர்வாகி ரமேஷ் என்பவர் மீது நாகர்கோவிலில் பரோட்டா கடை உரிமையாளரை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பாய்ந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: பாஜக நிர்வாகி ரமேஷ் என்பவர் மீது நாகர்கோவிலில் பரோட்டா கடை உரிமையாளரை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பாய்ந்துள்ளது. நாகர்கோவிலை சேர்ந்த பரோட்டா கடை உரிமையாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதற்கு காரணமாக இருந்ததாக பாஜக நிர்வாகி ரமேஷ் உள்பட ஐந்து பேர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.

நாகர்கோவிலை சேர்ந்த பரோட்டா கடை உரிமையாளர் ராதாகிருஷ்ணன் தனது சாவுக்கு பாஜக நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் தான் காரணம் என ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி வைத்திருந்ததால் இந்த வழக்கு பாய்ந்துள்ளது. என்ன நடந்து என்பதை இப்போது பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருளப்பபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த 35 வயதாகும் ராதாகிருஷ்ணன் குத்தாலம் மெயின் ரோட்டில் பரோட்டா கடை ஒன்று நடத்தி வந்திருக்கிறார்.

போலீசுக்கு தகவல்

போலீசுக்கு தகவல்

இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு அந்த ஓட்டலில் திடீரென ராதாகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நேரில் வந்து ராதாகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

திருமணம்

திருமணம்

அதன்பின்னர் விசாரணை நடத்தினார்கள் விசாரணையை தொடர்ந்து ராதாகிருஷ்ணனின் தாயார் நாடாச்சிசங்கம் சுசீந்திரம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், "எனக்கு 5 மகள்கள் மற்றும் மகன் (ராதாகிருஷ்ணன்) உள்ளனர். இதில் ராதாகிருஷ்ணன் தனது 5 சகோதரிகளையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு தான் திருமணம் செய்யாமல் இருந்து வந்தார்.

சுசீந்திரம்

சுசீந்திரம்

எனது மகன் கடனை அடைக்க குடும்ப சொத்தை விற்றார். அப்போது எனது கணவரின் உறவினர்கள் அதனை விற்க விடாமல் நீதிமன்றத்தை அணுகினர். சொத்தை விற்று பணம் கொடுப்பதாக கூறியும் அவர்கள் உடன்படவில்லை. எனது மகனை அவர்கள் தொடர்ந்து மிரட்டியுள்ளனர். இதனால் எனது மகன் தற்கொலை செய்து கொண்டான் " இவ்வாறு ராதாகிருஷ்ணனின் தாயார் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அத்துடன் ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக எழுதிய கடிதத்தை அவரது தாயார் சுசீந்திரம் காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.

பாய்ந்த வழக்கு

பாய்ந்த வழக்கு

இதையடுத்து புகாரின் அடிப்படையில், சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர், அந்த கடிதத்தில், எனது சாவுக்கு காரணமானவர்கள் வழக்கறிஞர்கள் ரமேஷ், பிரபு, பாலாஜி, பாஸ்கர், கண்ணன், ஆகிய 5 பேரின் பெயரை ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையல் அந்த 5 பேர் மீது சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் ரமேஷ் பாரதிய ஜனதா கட்சியின் ராஜகாமங்கலம் கிழக்கு ஒன்றிய பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+