புளிச்ச மாவு விவகாரம்.. ஜெயமோகனை தாக்கிய செல்வத்துக்கு ஜாமீன்
எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய நபருக்கு கோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளது
Recommended Video
நாகர்கோவில்: மாவு புளிச்சு போச்சு.. நல்லா இல்லை.. என்று எழுத்தாளர் ஜெயமோகன் தூக்கி எறிந்த சம்பவம்.. போலீஸ் ஸ்டேஷன், ஆஸ்பத்திரி வரை சென்றுவிட்டது. இந்த விவகாரத்தில் கடைக்காரர் செல்வத்துக்கு கோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளது.
கடந்த 14 - ந்தேதி மாவு வாங்க போன எழுத்தாளர் ஜெயமோகன், அது புளிச்ச வாடைவந்ததால், கடைக்கார பெண்ணிடமே திருப்பி தந்ததாகவும், அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த சமயத்தில் அங்கு வந்த கடைக்கார பெண்ணின் கணவன் செல்வம், ஜெயமோகனை தாக்கியதுடன், அவரது வீடு வரைக்கும் விஷயத்தை கொண்டு போய்விட்டார் என்றும் சொல்லப்பட்டது.

இதன்பிறகு, செல்வம் தரப்பில் ஜெயமோகன்தான் தாக்கினார் என்றும், செல்வம்தான் தாக்கினார் என்று ஜெயமோகன் தரப்பிலும் சொல்லப்பட்டது. மேலும் விவகாரம் பெரிதாக காரணம், கடைக்காரர் செல்வம் திமுக பிரமுகர் என்ற தகவலும் கசிந்தது. இதை பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார் ஜெயமோகன்.
இதையடுத்து, ஏஎஸ்பி. ஜவஹர் உத்தரவின்படி செல்வம் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஜாமீன் கோரி நாகர்கோவில் கோர்ட்டில் செல்வம் மனு செய்திருந்தார். அதை நேற்று விசாரித்த கோர்ட் செல்வத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதனிடையே, ஜெயமோகனால் பாதிக்கப்பட்ட கடைக்காரப் பெண்மணி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுவதுடன், வியாபாரிகள் சங்கத்தினரும் இதில் தலையிட்டு வருகின்றனர். எனவே, ஜெயமோகன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி கடைக்கார குடும்பத்தினரும், வியாபாரி சங்கங்களும் கோர்ட்டை நாட இருப்பதாக தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications