Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்கி ஊழியரின் மனைவி உள்பட 3 பேர் சடலமாக மீட்பு.. கணவர் எங்கே? கடிதத்தில் இருந்த பகீர் தகவல்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல்லில் தனியார் வங்கி ஊழியரின் வீட்டில் அவரது மனைவி, மகள், மகன் ஆகியோர் தூக்கில் பிணமாக கிடந்தனர். தனியார் வங்கி ஊழியர் மாயமாகி உள்ள நிலையில் கொலையா? தற்கொலையா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மாயமான வங்கி ஊழியர் எழுதி வைத்த கடிதம் கிடைத்துள்ளது. அதில் இருக்கும் தகவல் திடுக்கிட வைக்கிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த குருசாமி பாளையத்தை சேர்ந்தவர் பிரேம் ராஜ். இவர் தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். பணி நிமித்தமாக நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள பதி நகரில் குடியேறினார் பிரேம் ராஜ்.

namakkal bank employee

பிரேம் ராஜ் திருமணமானவர். இவரது மனைவி பெயர் மோகனப்பிரியா. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகளுக்கு ஒன்றரை வயது ஆகிறது. பெயர் ஸ்ரீபிரிநிதி. மகன் பெயர் ஸ்ரீபிரித்ராஜ். பிறந்து 6 மாதங்கள் மட்டுமே ஆகிறது.

திருமணம் ஆன புதிதில் இந்த ஜோடி மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். இந்நிலையில் தான் இன்று திடீரென்று வீட்டில் 3 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். பிரேம்ராஜின் மனைவி மோகனப்பிரியா, மகள் ஸ்ரீபிரிநிதி, மகன் ஸ்ரீபிரித்ராஜ் ஆகியோர் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர். இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் வந்து அவர்களின் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது வங்கி ஊழியரான கணவர் பிரேம் ராஜ் மாயமாகி இருந்தார். அவரது நிலை என்ன? என்பது தெரியவில்லை. இதனால் அவர்கள் 3 பேரின் சாவிலும் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் வீட்டை அதிரடியாக சோதனையிட்டனர். அப்போது கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அதில் திடுக்கிட வைக்கும் தகவல் இருந்தது.

அந்த கடிதத்தில், ‛‛பிரேம்ராஜ் ஆகிய நான் ஆன்லைன் மோசடி மூலமாக கடந்த பத்து நாளில் ரூ.50 லட்சம் ஏமாந்துவிட்டேன். இதை யாரிடமும் சொல்ல எனக்கு தைரியம் இல்லை. எனவே நான்கு பேரும் சேர்ந்து தற்கொலை செய்ய முடிவு எடுத்துவிட்டோம். எங்களை மன்னித்து விடுங்கள்'' என்று கூறப்பட்டு இருந்தது. இந்த கடிதம் என்பது பிரேம்ராஜ் சார்பில் எழுதப்பட்டுள்ளது போன்று உள்ளது.

அந்த கடிதத்தில் பிரேம் ராஜின் அம்மா, அவரது மனைவி மோகனப்பிரியாவின் தந்தையின் செல்போன்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அவர் மாயமாகி உள்ளார். வீட்டில் அவரது மனைவி, மகள், மகன் ஆகியோரின் உடல்கள் மட்டுமே உள்ளன. இதனால் இந்த வழக்கில் குழப்பம் நிலவி வருகிறது. பிரேம் ராஜ் எங்கே? கடன் பிரச்சனையில் அவர் தனது மனைவி, மகள், மகனை கொன்று உடலை தூக்கில் தொங்கவிட்டு தப்பி சென்றாரா? இல்லாவிட்டால் அவரும் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+