தங்கமணியின் வீட்டில் ரெய்டு.. நாமக்கல்லில் குவிந்த முன்னாள் அமைச்சர்களால் பரபரப்பு!
நாமக்கல்: நாமக்கலில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் அவரது வீட்டிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட முன்னாள் அமைச்சர்கள் வருகை தந்துள்ளனர்.
Recommended Video
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வருமானத்திற்கு அதிகமாக ரூ 4.85 கோடி சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் சென்னை, திருச்சி, செங்கல்பட்டு, ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட 69-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடைபெறுகிறது. அது போல் சென்னையில் மட்டும் 14 இடங்களில் இந்த ரெய்டு நடைபெறுகிறது.

அதிமுக
ரெய்டு நடைபெறுவதை அடுத்து அவரது வீட்டில் அதிமுகவினர் குவிந்தனர். கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ததாக தெரிகிறது. அவரது வீட்டிலிருந்து கணினி ஆதாரங்கள் கிடைத்தன. இதையடுத்து தங்கமணியிடம் நடத்தப்பட்ட 3 மணி நேர விசாரணையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

3ஆவது குற்றவாளி
அவரது மகன் தரணீதரன் 2ஆவது குற்றவாளியாகவும் மனைவி சாந்தி 3ஆவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். தங்கமணி வீட்டில் ரெய்டு என்றதும் அப்பகுதியில் அதிமுகவினர் குவிந்தனர். அது போல் நாமக்கல்லில் உள்ள ஆலாம்பாளையத்தில் உள்ள தங்கமணியின் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வருகை தந்துள்ளார்.

தங்கமணி
அது போல் முன்னாாள் அமைச்சர்கள் கே.சி. கருப்பண்ணன், தாமோதரன், கே வி ராமலிங்கம் உள்ளிட்டோர் தங்கமணியின் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல் நிர்வாக ரீதியில் பல மாற்றங்களை செய்துள்ளார். அதில் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக கந்தசாமியை நியமித்துள்ளார்.

கோப்புகள்
கந்தசாமி பொறுப்பேற்றவுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்த கோப்புகள் வேகமாக நகர்ந்தன. அதன்படி முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி, சி விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளிலும் கடந்த சில மாதங்களாக ரெய்டு நடைபெற்றது. இதுவரை 4 முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடந்த நிலையில் 5ஆவதாக தங்கமணியின் வீட்டில் ரெய்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications