12 மூலிகைகள்.. பைப் மூலம் அனுப்பி ஆவி பிடித்தல்.. சங்ககிரி பெட்ரோல் பங்கில் புதிய முயற்சி

Subscribe to Oneindia Tamil

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மூலிகை ஆவி பிடிக்கும் இலவச மையம் தொடங்கியுள்ளனர்.

Recommended Video

    12 மூலிகைகள்.. பைப் மூலம் அனுப்பி ஆவி பிடித்தல்.. சங்ககிரி பெட்ரோல் பங்கில் புதிய முயற்சி

    பொதுவாக தலைவலி, தலையில் நீர்க் கோர்த்தல், சளி, இருமல் சமயத்தில் ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து அதில் ஒரு சில சொட்டுகள் நீலகிரி தைலத்தை போட்டு ஆவி பிடிப்பார்கள்.

    Free steam inhalation arranged in Sankagiri petrol bunk

    குழந்தை பெற்ற பெண்களுக்கும் சளி பிடிக்காமல் இருக்க ஆவிபிடிக்க சொல்வார்கள். தற்போது கொரோனா வைரஸ் காலத்தில் ஆவி பிடித்தல் பல நன்மைகளை செய்வதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

    மூக்கடைப்பை சரி செய்து நுரையீரலில் உள்ள சளியை வெளியேற்றுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சங்ககிரி ரோட்டில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் மூலிகை ஆவி பிடிக்கும் இலவச மையம் திறக்கப்பட்டுள்ளது.

    லாரி உரிமையாளர்கள் திறந்துள்ள இந்த மையத்தில் பெரிய குக்கர் மூலம் தண்ணீரை சூடு செய்கிறார்கள். அதில் ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி உள்ளிட்ட 12 மூலிகைகள் போட்டு அதை பைப் லைனில் அனுப்பி வேது பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+