நாமக்கல்லில் திமுக தொண்டர்களால் திக்குமுக்காடிய உதயநிதி ஸ்டாலின்.. 10 கி.மீ கடக்க 2 மணி நேரம்
நாமகல்லில் தொண்டர்கள் குவிந்ததால் 10 கிமீ தூரத்தை கடக்க உதயநிதிக்கு 2 மணி நேரம் ஆனது
நாமக்கல்: நாமக்கல்லில் மிக பிரம்மாண்டமான முறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார் ராஜேஷ்குமார் எம்.பி.
திமுகவை பொறுத்தவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில்பாலாஜி ஆகிய இருவர் தான் கட்சி நிகழ்வாக இருந்தாலும் சரி, அரசு விழாவாக இருந்தாலும் சரி அதில் ஒரு மாஸ் காட்டுவார்கள்.
இதனிடையே அந்த 2 அமைச்சர்களுக்கு இணையான ஒரு பிரம்மாண்டத்தை நாமக்கல்லில் நிகழ்த்திக்காட்டி உதயநிதியின் பாராட்டு மழையில் நனைந்திருக்கிறார் மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார்.

உதயநிதி ஸ்டாலின் வருகை
சேலம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு நாமக்கல் சென்றடைந்தார். சேலத்திலிருந்து நாமக்கல்லுக்கு அதிகபட்சம் 45 நிமிடங்களில் செல்ல முடியும் என்ற நிலையில் 2 மணி நேரம் பயணித்து நாமக்கல் சென்று சேர்ந்தார் உதயநிதி. இதற்கு காரணம் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார் வழியெங்கும் ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்ட வரவேற்பு தான்.

திக்குமுக்காடிய உதயநிதி
இரவு நேரத்தில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் தன்னை வரவேற்க நின்ற தொண்டர்களால் நெகிழ்ந்து போய்விட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். நேற்றிரவு அப்படியென்றால் இன்று காலை அதைவிட ஒரு மாஸ் அமைச்சர் உதயநிதிக்கு காத்திருந்தது. நாமகல்லில் உள்ள விடுதியிலிருந்து அரசு விழா நடைபெற்ற பொம்மைக்குட்டை மேடு என்ற இடத்திற்கு சென்றடைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 2 மணி நேரம் ஆனது. மொத்தமே 10 கிமீ தான் தூரம், வழிநெடுகிலும் தொண்டர்களை குவித்து உதயநிதியை திக்குமுக்காட வைத்துவிட்டார் ராஜேஷ்குமார்.

முதல் மதிப்பெண்
இதனிடையே திமுக எம்.பி. ராஜேஷ்குமார் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தாம் வைத்த அனைத்து பரீட்சைகளிலும் தேர்வானது மட்டுமல்ல முதல் மதிப்பெண்னையும் ராஜேஷ்குமார் எம்.பி. பெற்றுவிட்டார் எனக் குறிப்பிட்டார். திமுகவை பொறுத்தவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில்பாலாஜி ஆகிய இருவர் தான் கட்சி நிகழ்வாக இருந்தாலும் சரி, அரசு விழாவாக இருந்தாலும் சரி அதில் ஒரு மாஸ் காட்டுவார்கள்.

நாமக்கல்லில் மாஸ்
ஆனால் அந்த 2 அமைச்சர்களையும் மிஞ்சும் வகையில் நாமக்கல்லில் மாஸ் காட்டி கவனம் ஈர்த்திருக்கிறார் ராஜேஷ்குமார் எம்.பி. திமுக இளைஞரணியில் இருந்து மாவட்டச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் என புரோமோஷன்கள் பெற்றவர் ராஜேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications