பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்.. வாயிலும், மூக்கிலும் ஒரே ரத்தம்.. உறைந்த தமிழ் சினிமா..!
நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் காலமானார்
நாமக்கல்: பிரபல குணச்சித்திர நடிகர் லிட்டில் ஜான் காலமானார்.. அவருக்கு வயது 43.. இதையடுத்து திரையுலகம் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறது.
தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகராகவும், காமெடி நடிகராவும் வலம் வந்தவர் லிட்டில் ஜான்.. இவரது இயற்பெயர் தனசேகரன்.
சினிமாவுக்காக லிட்டில் ஜான் என்று பெயரை மாற்றி கொண்டார்.. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த இவர் நடிப்பின் ஆர்வத்தால் சென்னையில் வாய்ப்பு தேடி அலைந்தார்.

வெங்காயம்
மொத்தமே 3 அடி உயரமுள்ள லிட்டில் ஜானுக்கு, பட வாய்ப்புகளும் ஓரளவு வந்தன.. சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும், சில படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார்... குறிப்பாக, வெங்காயம், ஐம்புலன் உள்பட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்த காமெடிகள் மக்களிடம் இவரை அடையாளப்படுத்தியது.. படவாய்ப்புகள் இல்லாத நேரத்தில் கிராமங்கள் தோறும் கோவில் திருவிழாக்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார் லிட்டில் ஜான்.

பள்ளிப்பாளையம்
அப்படித்தான், பள்ளிப்பாளையம் அருகே உள்ள மோடமங்கலம் என்கிற கிராமத்தில் மாரியம்மன் கோவில் பண்டிகை நடக்கிறது.. இந்த பண்டிகையை முன்னிட்டு கோயிலில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.. வழக்கம்போல் இந்த கலைநிகழ்ச்சியிலும் லிட்டில் ஜான் கலந்துகொண்டார்.. பின்னர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து தூங்கியவர், மறுநாள் காலையில் எழுந்திருக்கவில்லை.

வாயில் ரத்தம்
இதனால் சந்தேகமடைந்த நண்பர்கள், அவர் அருகில் சென்று பார்த்தபோதுதான், வாயிலும், மூக்கிலும் ரத்தம் வந்த நிலையில் கிடந்ததை பார்த்து அலறி துடித்தனர்.. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்... அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.. இதனால் நண்பர்கள் அதிர்ச்சி தாங்காமல் கதறி அழுதனர்.

மாரடைப்பு
தூங்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்திருப்பதாக கூறப்படுகிறது.. லிட்டில்ஜான் மறைவு செய்தி கேட்டு, திரையுலகினர் பலரும் இவரது உயிரிழப்பிற்கு இரங்கல் தெரிவித்தனர்.. இவரது இறுதிசடங்கு அல்லிநாயக்கன்பாளையத்தில் நடந்து முடிந்தது.. இதில் பல்வேறு கலை குழுக்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications