ஒன்லி குவார்ட்டர்தான்.. கணவனை கிண்டல் செய்ததால் விபரீதம்.. மகளுடன் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை

தாயும், மகளும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்

Subscribe to Oneindia Tamil

பரமத்திவேலூர்: குடிகாரனுக்கு ஐஸ்கிரீம் ஒரு கேடா.. குவார்ட்டர்தான் குடிப்பார்.. என்று கணவனை கிண்டலாக கேட்க, அது ஒரு பெரிய பிரச்சனையாக வெடித்து, கடைசியில் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து மனைவியும், மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த பரளி ஒத்தையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையன். இவர் ஒரு கூலித்தொழிலாளி இவருடைய மனைவி கண்ணகி. அகல்யா என்ற 16 வயது மகள் உட்பட ஒருமகனும் 2 மகள்களும் உள்ளனர். அகல்யா வளையப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார்.

Wife and Daughter suicide for Ice cream Issue

2 தினங்களுக்கு முன்பு இவர்கள் ஊரில் கோவில் திருவிழா நடந்தது. இதில் கண்ணையன், கண்ணகி, அகல்யா 3 பேரும் வந்தனர். அப்போது கண்ணகியும், அகல்யாவும் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டனர். இதை பார்த்த அந்த ஊர்க்காரர், கண்ணையனுக்கு ஐஸ்கிரீம் இல்லையா, அவருக்கு ஏன் வாங்கி கொடுக்கவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு கண்ணகி, குடிகாரனுக்கு எதுக்கு ஐஸ்கிரீம்? என்று கிண்டலாக கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து, கண்ணையாவுக்கு கோபம் வந்து வீட்டில் மனைவி, மகளுடன் இது சம்பந்தமாக தகராறு செய்துள்ளார். மனசு உடைந்து ஆத்திரம் அடைந்த கண்ணகி, மகளை நடுராத்திரி வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்துள்ளார்.

ரெயில் தண்டவாளத்தில் தாயும், மகளும் தலைவைத்து படுத்து கொண்டனர். சென்னையில் இருந்து சேலம் வழியாக பழநி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 2 மணிக்கு வந்துள்ளது. தண்டவாளத்தில் படுத்திருந்த அவர்கள் மீது ஏறி, 2 பேருமே உடல் சிதறி இறந்துவிட்டனர். இது சம்பந்தமாக சேலம் ரெயில்வே போலீசார் உடல்களை மீட்டு, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+