அப்பா, பாட்டி.. மொத்தம் 3 பேர்.. ரோட்டில் வரிசையாக வெட்டி சாய்த்த கோடீஸ்வரன்.. கலங்கிபோன ராசிபுரம்
ராசிபுரம் சாலையில் 3 பேரை அரிவாளால் வெட்டி இளைஞரை போலீசார் கைது செய்தனர்
நாமக்கல்: ரோட்டில் சென்று கொண்டிருந்த தன்னுடைய பெரியப்பா, பாட்டி உட்பட 3 பேரையும் அரிவாளை எடுத்து சரசரவென வெட்டிவிட்டார் கோடீஸ்வரன்.. இதையடுத்து வீட்டுக்குள் போய் பதுங்கி கொண்ட இவரை மயக்க ஸ்பிரே அடித்து.. 3 மணி நேரம் போராடிதான் போலீசார் பிடித்து கைது செய்தனர்.. இந்த சம்பவம் ராசிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பாளப்பாளையத்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன்.. இவர் ஒரு ரவுடி.. கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் ஜெயிலுக்கு போயிட்டு, 10 நாளைக்கு முன்புதான் ஊருக்கு வந்தார்.

இந்நிலையில் வீட்டிலிருந்து அரிவாளை எடுத்து கொண்டு அவரது பெரியப்பா பெரியண்ணனை வெட்டுவதற்காக கோடீஸ்வரன் வெளியே சென்றுள்ளார்.. சாலையில் சென்று கொண்டிருந்த பெரியப்பா, பாட்டி லட்சுமி, ராசிபுரத்தை சேர்ந்த நரேஷ்குமார் உட்பட 3 பேரையும் திடீரென அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டிவிட்டார்.. இதில் அந்த பாட்டி மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
நடுரோட்டிலேயே இந்த 3 கொலைகளையும் இந்த இளைஞர் அசால்டாக செய்துவிட்டார். இதைப்பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.. சிலர், கொலைவெறியுடன் நின்று கொண்டிருந்த கோடீஸ்வரனை பிடிக்க முற்பட்டனர்.. அதற்குள் அவர் ஓடிப்போய் வீட்டிற்குள் புகுந்து கொண்டு கதவையும் உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு கொண்டார்.

இதனால் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் சொன்னார்கள்.. அவர்கள் விரைந்து வந்து பாட்டியின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. அங்கு அவர்களுக்கு தீவிரமான சிகிச்சை தரப்பட்டு வருகிறது.
இதனிடையே வீட்டுக்குள் ஒளிந்து கொண்டிருந்த கோடீஸ்வரன் வெளியே வரவே இல்லை.. இருந்தாலும் அவர் தப்பி வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காக மக்கள் வீட்டுக்கு வெளியிலேயே நின்று கொண்டிருந்தனர்.. அதற்குள் போலீசாரும் வந்துவிட்டனர்.. பதுங்கியிருந்த கோடிஸ்வரனை பிடிக்க முயன்றனர்.. ஆனால் அவர்களுக்கே டிமிக்கி கொடுத்து கொண்டிருந்தனர்.

கடைசியில் மயக்க ஸ்பிரே அடித்து, 3 மணிநேரம் போராடிதான் கோடீஸ்வரனை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாகி விட்டது. இனிமேல்தான் 3 பேரையும் அவர் அரிவாளால் வெட்டினார் என்று விசாரணையில் தெரியவரும். ஆனால் கோடீஸ்வரன் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. வேலைக்கு நிறைய இடங்களில் முயற்சித்தாராம்.. அதற்காக நிறைய பேரிடம் பணம் தந்து இவர் ஏமாந்தும் உள்ளார்.. இதனால்தான் ஊருக்குள் பலரிடம் பிரச்சனை செய்து ஜெயிலுக்கும் போனாராம்..
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications