கண்மூடித்தனமாக நடந்த துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் பலி.. சிதறி ஓடிய பொதுமக்கள்! அமெரிக்காவில் ஷாக்
நியூயார்க்: அமெரிக்காவின் லுயிஸ்டனில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
உலக அளவில் துப்பாக்கிகள் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. இந்நாட்டில் சராசரியாக ஒவ்வொரு 100 பேரிடமும் 120 துப்பாக்கிகள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்கிற அச்சமும் மேலெழுந்திருக்கிறது. இதன் காரணமாக அடிக்கடி அங்கு துப்பாக்கிச்சூடுகள் நடக்கின்றன. கடந்த ஆண்டு மே மாதம் 24ம் தேதி அமெரிக்காவின் உவால்டே பகுதியில் உள்ள பள்ளியில் நடந்த திடீர் துப்பாக்கிச்சூட்டில் சுமார் 21 மாணவர்கள் கொல்லப்பட்டனர். இது ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது.

எனவே துப்பாகிகளை பயன்படுத்துவது தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இருப்பினும் அவ்வப்போது பெயரளவுக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள், பிரச்னைகளை முழுமையாக முடிவித்துவிட்டதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. பின்னர் கொஞ்ச காலத்திலேயே இப்பிரச்னைகள் மீண்டும் பூதாகரமாக வெடிக்கிறது. அப்படியாகத்தான் நேற்று லுயிஸ்டனில் பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருக்கிறது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது. அதேபோல 50-60 வரை படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதேபோல மர்ம நபரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications