Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாஸ்ரூமை படுக்கை அறையாக மாற்றிய அமெரிக்க ஆசிரியைகள்.. அலறிய பெற்றோர்கள்.. என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுடன் செக்ஸ் வைத்துக்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டில் இதுவரை 6 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து பள்ளிகளில் கண்காணிப்புகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

மனித வாழ்க்கையில் கல்வி என்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அதை சொல்லி தருபவர்களும் முக்கியமானவர்கள்தான். உலகம் முழுவதும் உள்ள அனைத்து இன கலாச்சாரங்களிலும் ஆசிரியர்களுக்கு என்று தனி மரியாதை இருக்கிறது. ஆனால் இந்த ஆசிரியர்களே சில நேரத்தில் வரம்பு மீறினால் என்ன செய்வது? அப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசியர் கைது, மாணவியை ஆபாச வீடியோ எடுத்த ஆசிரியர் கைது என செய்திகள் அவ்வப்போது வந்துக்கொண்டுதான் இருக்கிறது.

6 teachers arrested for having sex with school students in USA

இந்நிலையில் அமெரிக்காவில் இதுபோன்று, ஆனால் கொஞ்சம் வித்தியாசமான சம்பவம் அரங்கேறியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது, பள்ளி மாணவர்களை ஆசிரியைகள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், "இந்த சம்பவம் அமெரிக்காவின் வெவ்வேறு பள்ளிகளில் நடந்துள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக நாங்கள் சில புகார்களை பெற்றிருந்தோம். புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 16 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள்தான். கென்டக்கியைச் சேர்ந்த 38 வயதான பள்ளி ஆசிரியர் எலன் ஷெல் டான்வில்லே, அவருடைய வகுப்பு சிறுவர்களுடன் நெருக்கமாக பழகியுள்ளார். பின் மொபைல் நம்பர் கொடுத்து அடிக்கடி போன் செய்ய சொல்லி இருக்கிறார். இப்படி இருக்கும்போது திடீரென ஒருநாள் பள்ளியின் யாருமற்ற வகுப்பறையில் 16 வயது மாணவர் ஒருவருடன் செக்ஸில் ஈடுபட்டுள்ளார். நாங்கள் ஆசிரியையை கைது செய்து விசாரித்தபோது மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது இந்த ஆசிரியர் ஒரேயொரு மாணவருடன் மட்டுமல்லாது நான்கைந்து மாணவர்களுடன் இவர் செக்ஸ் கொண்டிருக்கிறார்.

அதேபோல மற்றொரு பள்ளியில் ஹீதர் ஹேர் எனும் ஆசிரியரும் இதே போன்று பதின் பருவ மாணவனுடன் செக்ஸ் வைத்துக்கொண்டதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரைத் தொடர்ந்து ஓக்லஹோமாவில் எமிலி ஹான்காக் எனும் ஆசிரியையை நாங்கள் கைது செய்துள்ளோம். தொடக்கத்தில் இவர் மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பள்ளியிலிருந்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டோம். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக அவர் சில தகவல்களை கூறினார். எனவே சம்பந்தப்பட்ட மாணவரிடம் நாங்கள் விசாரணை நடத்தினோம். விசாரணையில் சம்பவம் உண்மை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து 15 வயது மாணவனுடன் செக்ஸ் வைத்துக்கொண்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு சமபவத்தில் 35 வயதான கிறிஸ்டன் கண்ட் எனும் ஆசிரியரை நாங்கள் கைது செய்துள்ளோம். இதேபோல பள்ளியில் ஈட்டி எறிதல் பயிற்சியாளராக பணியாற்றிய ஹன்னா மார்த் எனும் இளம் ஆசிரியை மீதும் இதே குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. நீங்கள் இந்த ஆசிரியரை பார்த்தால் இந்த குற்றச்சாட்டுக்கும் இவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அடித்து கூறுவீர்கள். ஆனால் மாணவரிடம் விசாரித்ததில் தகவல் உண்மை என்பதால் நாங்கள் அவரை கைது செய்துள்ளோம்" என்று காவல்துறையினர் கூறியள்ளனர். இப்படியாக அமெரிக்கா முழுவதும் 6 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியைகளே மாணவர்களிடம் இப்படி நடந்துக்கொண்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+