பீர் குடித்துவிட்டு.. பால் கொடுத்த தாய்.. புளு கலரில் மாறி குழந்தை மரணம்.. கோர்ட்டில் வினோத தீர்ப்பு
தாய் பீர் குடித்ததால் குழந்தை இறந்தது தொடர்பாக அமெரிக்க கோர்ட் வினோத தீர்ப்பு அளித்துள்ளது
நியூயார்க்: அம்மா பீர் குடித்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம், அவரது குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது.. ஆனால் இது ஒன்றும் பெரிய தப்பில்லை என்று அமெரிக்காவின் மேரிலாண்ட் கோர்ட் சொல்லி உள்ளது.
அமெரிக்காவின் மேரிலாண்ட் நகரில் கடந்த 2013-ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்த பெண்ணின் பெயர் மூரியல் மாரிசன்.. இவருக்கு 4 மாத குழந்தை ஒன்று இருந்தது.

சம்பவத்தன்று இவர் பேஸ்புக் பார்த்து கொண்டே இருந்தார்.. பிறகு பீர் எடுத்து குடித்துள்ளார்.. ஒருகையில் பீர், ஒரு கையில் செல்போன் என இரவெல்லாம் படுக்கையில் இருந்துள்ளார். இவருக்கு பக்கத்திலேயே கிடந்த குழந்தைக்கு டயபெர் மாற்றிவிட்டார்.
குழந்தை அழுததும் தூக்கி பால் கொடுத்தார்.. பிறகு அப்படியே தூங்கியும் விட்டார்.. மறுநாள் காலையில் பார்த்தால், குழந்தை செத்து கிடந்தது.. அதன் உதடு முழுக்க புளு கலரில் இருந்தது. இதையடுத்து போலீசார் இதை பற்றி விசாரணை மேற்கொண்டனர்.. வழக்கு நீதிமன்றம் சென்றது.
இப்படி குடித்துவிட்டு தாய்ப்பால் தந்திருக்கிறார்.. மேலும் குழந்தைக்கு பக்கத்திலேயே படுத்திருந்ததால்தான் குழந்தை இறந்துவிட்டது என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால், அவருக்கு 20 வருஷம் தண்டனையும் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த பெண்ணோ, இதை எதிர்த்து மேல் முறையீடு செய்தார்.. தன் தண்டனையை குறைக்க வேண்டும் என்றும் தன் மீது எந்த தவறும் இல்லை என்றும் கேட்டுக் கொண்டார். இந்த மனுவின் பேரில் வழக்கு நடந்தது.
"அஜாக்கிரதையால்தான் குழந்தை இறந்துவிட்டது.. அப்படித்தான் இந்த கேஸை பார்க்க வேண்டும்.. இந்த தாய் பிளான் செய்து தன் குழந்தையை கொல்லவில்லை.. அதுவுமில்லாமல் குழந்தையுடன் தாய் தூங்கியது அந்த அளவுக்கு தப்பும் இல்லை.. ஒரு பீர் குடிச்சிட்டு, 4 மாத குழந்தையின் பக்கத்தில் தூங்குவதனாலேயே குழந்தையை சாகடிக்க முடியாது" என்று மேரிலாண்ட் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் சொன்னார்கள்.. இதற்கு அந்தம்மா விடுதலை செய்யப்பட்டார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications