சீனாவின் கோரிக்கை ஏற்பு.. முதல்முறையாக காஷ்மீர் குறித்து பூட்டிய அறையில் ஐநா கவுன்சில் விசாரணை
நியூயார்க்: ஜம்மு-காஷ்மீரின் நிலைமை குறித்து விவாதிக்க வேண்டும் என்ற சீனாவின் வேண்டுகோளுக்கு இணங்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இன்று (செவ்வாய்க்கிழமை)விவாதிக்கும் என்று ஐநா தூதர்கள் தெரிவித்தனர்.
370 வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட பழமை வாய்ந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இது தொடர்பாக ஆகஸ்ட் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அதன்பிறகு தற்போது பாகிஸ்தான் மற்றும் அதன் நட்பு நாடான சீனாவின் கோரிக்கையை ஏற்று முதல் தடவையாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.
டிசம்பர் 12 ம் தேதி ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு எழுதிய கடிதத்தில், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி. ஜம்மு காஷ்மீரில் மேலும் பதற்றம் அதிகரிப்பதாக கூறி கவலை தெரிவித்தார்.
இதேபோல் நிலைமையின் தீவிரத்தன்மை மற்றும் அதிகரிக்கும் அபாயம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாகிஸ்தானின் கோரிக்கைக்கு ஆதரவு அளிப்பதாக சீனாவும் தெரிவித்தது. மேலும் ஜம்மு காஷ்மீரின்நிலைமை குறித்து ஐநா சபைக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
சீனாவின் கோரிக்கையை ஏற்று முதல்முறையாக மூடப்பட்ட அறைக்குள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த தகவலை ஐநா சபை தூதர்கள் உறுதிப்படுத்தினர். இந்திய நேரப்படி இன்று இரவுக்கு மேல் இந்த கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications