12 நாளில் தென்னிந்தியாவை சிதைத்த மோசமான மழை.. அனிமேசன் படத்துடன் நாசா அதிர்ச்சி தகவல்
நியூயார்க்: தென்மேற்கு பருவமழையால் 12 நாளில் மட்டும் இந்தியா, மியான்மர். உள்பட தெற்காசிய நாடுகளில் சில இடங்கள் மிகப்பெரிய வெள்ள பாதிப்பால் சிதைந்து போய் இருப்பதாக நாசா புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நாசா தனது எர்த் அப்சர்வேட்டரி பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஆகஸ்ட மாதத்தில் கடந்த சில வாரங்களில் பெய்த கனமழையால் மியான்மர் (பர்மா) மற்றும் தென்னிந்தியா மற்றும் மேற்கு இந்தயா பகுதிகள் கடும் வெள்ளபாதிப்பாலும், நிலச்சரிவுகளால் சிதைந்து போய் உள்ளது. சராசரிக்கு மேல் பருவமழை பெய்ததால் ஆறுகள் மற்றும் நீரோடைகள் அவற்றின் கரைகளை தாண்டி நிரம்பி வழிகின்றன. அதேநேரம் பகுதிகளில் மலைப்பகுதிகள் சீர்குலைந்தன.

பொதுவாக தெற்காசியாவில் பருவமழை ஜுலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக இந்தியா தனது வருடாந்திர மழையில் 70 சதவீதத்தை தென்மேற்கு பருமழையில் இருந்து பெறுகிறது. இந்த மழைதான் இந்தியாவின் குடிநீர் விநியோகத்திற்கும், விவசாயம் செய்வதற்கு முக்கியமானது. ஆனால் இந்த பருவமழையால் ஆண்டு தோறும் பல ஆயிரம் இறப்புகள் ஏற்படுவதுடன் 15 சதவீதம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த அனிமேசன் படம் (அனிமேசன் படம் வெளியிட்டுள்ளது) கடந்த ஆகஸ்ட் 1 முதல் 12ம் தேதி வரையிலான காலத்தில் பெய்த மழை அளவுகளை சித்திரிக்கிறது. கருஞ்சிவப்பு புள்ளிகள் அதிக மழை பெய்ததை பிரதிபலிக்கின்றன. பல இங்களில் 60 சென்டிமீட்டருக்கு மேல் பெய்துள்ளது. அவற்றை இது பிரதிபலிக்கிறது. இந்த மழை அளவீடு கணக்கிடும் பணியினை நாசாவுடன் ஜப்பான் மற்றும் பல்வேறு நாடுகள் இணைந்து செய்து வருகின்றன.
ஆகஸ்ட் 9ம் தேதி மியான்மரில்(பர்மா) எற்பட்ட நிலச்சரிவு 9 பேரின் உயிரை பறித்தது. அங்கு ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளபெருக்கு காரணமாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பேரிடர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர் எனறு ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தென் மற்றும் மேற்கு மாநிலங்களான கேராள, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நூறறுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். 10லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். வெள்ளத்தால் சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் சேதமடைந்தன. கோடைக்காலத்தில் பயிரிட்டு இருந்த பல ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் அழிந்து போயின.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி 45 சதவீதம் மழை ஆகஸ்ட் 7 முதல் 14ம் தேதிக்கு பெய்துள்ளது. அதேநேரம் ஜூன் 1 முதல் பெய்யும் தென்மேற்கு பருவமழையில் 50 சதவீதம் பெய்துள்ளது. வழக்கத்தைவிட ஒரு சதவீதம் அதிகம் என்பது தெரியவந்துள்ளது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications