காஷ்மீர் பிரச்சனை... ஐநாவில் மீண்டும் தோற்றுப்போன பாகிஸ்தான்-சீனா.. இனிமேலாவது.. இந்தியா நச் பதிலடி
Recommended Video
நியூயார்க்: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்சனையை மீண்டும் எழுப்ப முயன்ற பாகிஸ்தானுக்கு எந்த ஆதரவும் கிடைக்காததால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இதை சுட்டிக்காட்டி பாகிஸ்தானை விமர்சித்துள்ள இந்தியா, இனிமேலாவது இந்தியாவுடன் இயல்பான உறவை பேணுவது போன்ற கடினமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதில் இருந்தே பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாகிஸ்தானின் நட்பு நாடான சீனாவும் இந்த பிரச்சனையை ஐநா சபையில் எழுப்பி வருகிறது.
ஆனால் பாதுகாப்பு கவுன்சிலின் மற்ற நான்கு நிரந்த உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதேபால் நிரந்தரம் இல்லாத உறுப்பு நாடுகளும் காஷ்மீர் பிரச்சனை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று கூறி சீனாவின் மசோதாவை எதிர்க்கின்றன.

சீனாவின் முயற்சி தோல்வி
இந்நிலையில் இரண்டு முறை சீனா கொண்டு வந்த ஜம்மு காஷ்மீர் பிரச்சனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் மூன்றாவது முறையாக ஐநா சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து கொண்டு வந்தது. ஆனால் இப்போதும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம் என்று மற்ற நாடுகள் எதிர்த்ததால் சீனாவும் பாகிஸ்தானும் தனிமைப்படுத்தப்பட்டன.

இந்தியா மகிழ்ச்சி
ஐ.நா. அவைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன் இது பற்றி கூறுகையில் "ஐ.நா.வின் ஒரு உறுப்பு நாடு (சீனா) மேற்கொண்ட முயற்சியை நாங்கள் மீண்டும் கண்டோம். மற்ற அனைவரின் தெளிவான பார்வையால் தோல்வி அடைந்தது.

நம்பிக்கையற்றவை
பாகிஸ்தான் பிரதிநிதிகள் கொண்டுவந்த எந்த ஒரு குற்றச்சாட்டும் ஐநா சபையில் ஏற்கப்படவில்லை. ஐ.நா. அரங்கில் பாகிஸ்தான் பிரதிநிதிகள் பலமுறை கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் நம்பிக்கையற்றவை என்று புறந்தள்ளப்பட்டதை எண்ணி மகிழ்ச்சியடைகிறோம்.

பாகிஸ்தான்
இந்த முயற்சி ஒரு கவனச்சிதறலாக கருதப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இந்தியாவுடனான உறவுகளில் பாகிஸ்தானுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை எழுப்பவும் தீர்க்கவும் இருதரப்பு வழிமுறைகள் உள்ளன என்று பல நட்ப நாடுகளால் சுட்டிக்காட்டப்பட்டது. இப்போது பாகிஸ்தானுக்கு புரிந்திருக்கும். இனிமேலாவது இந்தியாவுடன் இயல்பான நட்புறவை பேணுவதற்கு பாகிஸ்தான் முயற்சி செய்ய வேண்டும்" என்றார்
-
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications