என்னுடைய ஆசிரம சொத்துகளை தீய சக்திகள் அபகரிக்க முயற்சி செய்யுறாங்க.. நித்யானந்தா பகீர்
நியூயார்க்: தனது ஆசிரம சொத்துகளை தீய சக்திகள் அபகரிக்க முயற்சிப்பதாக, சாமியார் நித்தியானந்தா குற்றம்சாட்டி உள்ளார்.
இந்தியாவில் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ள நித்யானந்தா மீது பல வழக்குகள் உள்ளன. அவரை குஜராத் மற்றும் கர்நாடகா காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.
இந்நிலையில் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்ட நித்யானந்தா, எந்த நாட்டில் வசிக்கிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை.

அமெரிக்கா அருகே
கடைசியாக நித்யானந்தா ஈக்வடார் நாட்டில் தங்கியிருந்தார். அதன்பிறகு ஹைதி தீவுக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்ற நித்யானந்தா அமெரிக்காவுக்கு அருகே ஏதோ ஒரு தீவில் இருப்பதாக சொல்கிறார்கள்.

சத்சங்கம்
இந்நிலையில் நித்யானந்தாவை இண்டர்போல் உதவியுடன் பிடிக்க போலீசார் தீவிரமாக முயன்று வருகிறார்கள். அதேநேரம் நித்யானந்தா தன்னை சுற்றி பற்றி நடப்பவை பற்றி கவலைப்படாமல் தினமும் சத்சங்கம் மூலம், சொற்பொழிவு ஆற்றி வருகிறார். தன் மீதான குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறார்.

1200 இடங்களில சொத்துக்கள்
இந்நிலையில் நேற்றிரவு ஆற்றிய உரையில், தீய சக்திகள் தன்னிடம் உள்ள சொத்துக்களை திருடி விட்டதாக பரபரப்பு புகாரை தெரிவித்தார். இந்தியா முழுவதும் தனக்கு சொந்தமான 1,200 இடங்களில் உள்ள சொத்துகளை அபகரிக்க முயற்சி நடப்பதாகவும், அது குறித்து முழுவிவரங்களை இப்போதைக்கு வெளியில் கூற முடியாது என்றும் கூறினார்.

மேட்டூர் அணை
மேட்டூர் அணையில் உள்ள கோயிலின் மூலவர் லிங்கம் தன்னிடம் இல்லை என்று கூறிய நித்யானந்தா, முந்தைய பிறவியில் அங்கு ஏற்படுத்தி இருந்த மூல லிங்கம் எனப்படும் ஞான சக்தி தான் தன்னிடம் உள்ளதாகவும் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications