ஆப்கான் பெண் சுதந்திரத்திற்கும், பாதுகாப்பிற்கும் தாலிபானே பொறுப்பு: ஜி7 மாநாட்டில் கூட்டு அறிக்கை
நியூயார்க்: ஆப்கானிஸ்தான்னில் பெண் சுதந்திரத்திற்கும், பாதுகாப்பிற்கும் தாலிபானே பொறுப்பு என்று ஜி7 மாநாட்டின் முடிவில் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான் வெற்றி குறித்தும், அங்கிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவது குறித்தும் ஜி7 நாடுகள் நேற்று ஆலோசனை மேற்கொண்டன. ஜி7 என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகும்.
சர்வதேச அளவில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து இந்த வலுவான கூட்டமைப்பு விவாதிப்பது வழக்கம். இந்த நிலையில் தாலிபான் வெற்றி குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பின் பெயரில் அவசர ஜி7 ஆன்லைன் கூட்டம் நேற்று நடைபெற்றது.

அறிக்கை
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் 7 நாடுகளும் ஒன்றாக கூட்டு அறிக்கை வெளியிட்டது. அதில், ஆப்கானிஸ்தானின் சுதந்திரத்திற்கும், அங்கு மக்களின் உரிமைக்கும், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் தாலிபான்கள் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் மக்களுக்கு தாலிபான்கள் பாதுகாப்பான வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

மக்கள்
சிறுபான்மையினர், பெண்களின் பாதுகாப்பிற்கும் இவர்களே பொறுப்பேற்க வேண்டும். இப்போது ஜி7 நாடுகளின் முக்கிய குறிக்கோள் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதே. இந்த பணிகளை நாங்கள் தொடர்ந்து
மேற்கொள்வோம். மருத்துவ உதவிகள், பாதுகாப்பு உதவிகளை ஜி 7 நாடுகள் தொடர்ந்து வழங்கிடும். அகதிகளின் மீள் குடியேற்றம்தான் இப்போது எங்களின் குறிக்கோள்.

குறிக்கோள்
ஆப்கான் மக்கள் நிம்மதியாக, பாதுகாப்பாக வாழ வேண்டும். அவர்களுக்கான மருத்துவ, பொருளாதார உதவிகள் வழங்கப்பட வேண்டும். ஆப்கானிஸ்தான் மீண்டும் தீவிரவாதிகளின் சொர்க்கமாக மாறிவிட கூடாது. ஆப்கானை மையமாக வைத்து தீவிரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட கூடாது. ஜி7 நாடுகளும், எங்களின் நட்பு நாடுகளும், ஜி 20 நாடுகளும், ஜநாவும் இதற்காக ஒன்றாக இணைந்து பணியாற்றும்.

தீவிரவாதம்
ஜி7 என்பது உலகின் மிகப்பெரிய வலுவான கூட்டமைப்பு. பொருளாதார ரீதியாக ஜி7 நாடுகள் வலிமை வாய்ந்தது. இதனால் நாங்கள் கொடுக்கும் அழுத்தம் அரசியல் ரீதியாக, பூகோள ரீதியாக ஆப்கானிஸ்தானில் எதிரொலிக்கும் என்று நம்புகிறோம். அங்கு இருந்து வெளியேற விரும்பும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதே எங்களின் இப்போதைய குறிக்கோள் என்று ஜி7 கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications