" இதுவரை 5000 பெண்களுடன்"... எக்ஸல் ஷீட் போட்ட தொழிலதிபர்.. அதிரடியாக பாய்ந்தது வழக்கு!
5000 பெண்களுடன் உறவு கொண்ட தொழிலதிபர் மீது பாய்ந்தது வழக்கு
நியூயார்க்: 5000 பெண்களுடன் ஒரு தொழிலதிபர் உறவு வைத்துள்ளார்.. அத்துடன் இதுகுறித்த தகவல்களையும் அவர் சேகரித்து வைத்திருந்த விதம் ஒட்டுமொத்த பேரையும் அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.
நியூயார்க் போஸ்ட் ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது.. அந்த நபர் பெயர் மைக்கேல் குகேன்.. இவர் மிகப்பெரிய தொழிலதிபர்.. ஏகப்பட்ட பிசினஸ்களை செய்து வருபவர்.
இவரது கம்பெனிகள் கலிபோர்னியாவில் உள்ளது.. இந்நிலையில், இவர்மீது தான் பகீர் புகார் ஒன்று கிளம்பி உள்ளது.
குரோம்பேட்டையில் பஸ் டயர் ஏறியதில் பெண் உயிரிழப்பு.. கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்த சோகம்
வேலை
தன்னிடம் வேலை பார்க்கும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் மைக்கேல்.. அதுவும் எல்லாருமே இளம்பெண்களாம்.. கிட்டத்தட்ட 5 ஆயிரம் பெண் ஊழியர்களை மைக்கேல் நாசம் செய்துள்ளார்.. பெண்களை அழைத்து சென்று உல்லாசமாக இருப்பதற்காகவே, பிரத்யேகமான அறைகளை ஏற்படுத்தி உள்ளாராம்.. கடந்த 2016-ம் ஆண்டு முதலே தன்னிடம் வேலை பார்க்கும் இளம்பெண்களிடம் இத்தகைய செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
உடலுறவு
பல பெண்கள் இதுகுறித்து எந்த விஷயத்தையும் வெளியே சொல்லாமல் இருந்து வந்தனர்.. ஆனால், மைக்கேல் செய்த காரியத்தை பார்த்து அதிர்ந்துவிட்டனர். அதாவது யார் யாருடன் தான் உறவு வைத்திருக்கிறோம் என்பது குறித்து கம்ப்யூட்டரில் எக்சல் ஷீட்டில் பதிவு செய்து வைத்துள்ளாராம்.. அந்த இளம்பெண்ணின் பெயர், வயது, வேலை தகுதி, போன்றவைகள் அடங்கிய மொத்த விவரங்களையும் அந்த எக்சல் ஷீட்டில் புள்ளிவிவரங்களுடன் பதிவு செய்து வைத்துள்ளார்.
பலாத்காரம்
வழக்கமாக, கணக்கு வழக்குகளை பார்க்கத்தான் மிகப்பெரிய நிறுவனங்கள், கம்பெனிகளில் எக்சல் ஷீட்களை பயன்படுத்துவது வழக்கம்.. ஆனால், தான் எத்தனை பெண்களை பலாத்காரம் செய்துள்ளோம் என்பதை எக்சல் ஷீட்டில் குறிப்பிட்டு வந்துள்ளார் மைக்கேல்.. 5 ஆயிரம் பெண்கள் என்பதால், எக்சல் ஷீட்டை பயன்படுத்தி இருப்பதாக தெரிகிறது.. இந்த விவரங்கள் தெரிந்துதான் பெண்கள் கொந்தளித்து போய்விட்டார்களாம்.. இதையடுத்து, மொத்த பேரும் கோர்ட்டுக்கு சென்றுவிட்டனர்.
உறவு
தங்களிடம் உறவு கொண்டு ஏமாற்றியதுடன், மானம் மரியாதையே போய்விடும் வகையில், புள்ளிவிவரங்களுடன் தங்களின் மொத்த டேட்டாவையும் குறிப்பிட்டு வைத்ததால், தங்களுக்கு உரிய நஷ்டஈடாக 800 டாலர்கள் வேண்டும் என்று கோரி உள்ளனர்.. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மைக்கேல் மீது வழக்கு பாய்ந்துள்ளது.. ஒரு தொழிலதிபர் செய்யக்கூடிய காரியமா இது? என்று அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனராம்..!