10 வருட பழைய ட்விட்.. இஸ்லாமியர்கள் பற்றி புது ட்விட்டர் சிஇஓ சொன்ன கருத்து.. கொதிக்கும் வலதுசாரிகள்
நியூயார்க்: ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக பராக் அக்ரவால் 10 வருடங்களுக்கு முன் இஸ்லாமியர்கள் பற்றி செய்த ட்விட் ஒன்று வைரலாகி வருகிறது.
Recommended Video
ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக பராக் அக்ரவால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதன் சிஇஓ மற்றும் நிறுவனர் ஜாக் பணியில் இருந்து விலகியதால் தற்போது சிடிஓவாக இருந்த பராக் அக்ரவால் சிஇஓ ஆகி உள்ளார்.
இந்த நிறுவனம் தனியாக செயல்பட வேண்டிய நேரம் இது. அதன் நிறுவனர்கள் இதை கண்காணிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால் நான் பதவி விலகுகிறேன், என்று ஜாக் அறிவித்துள்ளார்.

சிஇஓ
இந்த நிலையில் சிஇஓவாக அறிவிக்கப்பட்ட முதல் நாளே நேற்று பராக்கின் பழைய ட்விட்களை நெட்டிசன்கள் வெளியே தோண்டி எடுத்து டிரெண்ட் செய்து கொண்டு இருந்தனர். சச்சின் டெண்டுல்கரின் மும்பை இந்தியன்ஸ் கேப்டன்சியை பராக் விமர்சனம் செய்தது, ஷ்ரேயா கோஷலிடம் பராக் கடலை போட்டது என்று பல விஷயங்களை தோண்டி எடுத்து நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

சர்ச்சை
இந்த நிலையில்தான் அவர் செய்த ட்விட் ஒன்று பெரிய அளவில் சர்ச்சையானது. 2010 அக்டோபரில் பராக் செய்திருந்த ட்விட் ஒன்றில், உங்களால் இஸ்லாமியர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் வேறுபாட்டை காண முடியவில்லை என்றால் நாங்கள் வெள்ளையர்களுக்கும் நிற வெறியர்களுக்கும் இடையில் வேறுபாட்டை காண மாட்டோம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

நிற வெறி
அதாவது இஸ்லாமியர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்று சொல்வீர்கள் என்றால், வெள்ளையர்கள் எல்லோருமே நிறவெறியர்கள்தான் என்று நாங்களும் கூற நேரிடும் என்று அர்த்தத்தில் அந்த ட்விட் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இது இவரின் சொந்த கருத்து கிடையாது. ஆசிப் மண்டாவி என்று காமெடியன் Daily Show என்ற நிகழ்ச்சியில் சொன்ன காமெடியான கருத்து ஆகும் இது.

இஸ்லாமியர்கள்
எங்களை தீவிரவாதி என்று சொன்னால் உங்களை நிறவெறியர் என்று சொல்வோம் என்று இஸ்லாமியர் குற்றஞ்சாட்டுவது போல இந்த காமெடியை 2010ல் அவர் செய்து இருந்தார். இதைத்தான் பராக் ட்விட் செய்து இருந்தார். அதோடு இதை பற்றி பராக் தனது ரிப்ளேயில் விளக்கம் கொடுத்து இருந்தார். ஆனால் இப்போது இது சர்ச்சையாகி உள்ளது.

வலதுசாரி
அதன்படி இவர் வலதுசாரிகளுக்கு எதிரானவர். பராக் இஸ்லாமியர்களுக்கு ஆதரவானவர். முக்கியமாக வெள்ளையின மக்களுக்கு எதிரானவர். ஜாக் இப்படிதான் வலதுசாரியான டிரம்பிற்கு எதிராக இருந்தார். அவரின் கணக்கை நீக்கினார்.

பராக்
இப்போது பராக் அதேபோல் வலதுசாரிகளுக்கு எதிராக இருக்கிறார். இஸ்லாமியர்களுக்கு ஆதரவான அந்த கருத்து அவரின் சொந்த கருத்து இல்லை என்றாலும் ஏன் அதை ட்விட் செய்ய வேண்டும் என்று வலதுசாரி கொள்கை கொண்ட நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications