காசாவில் நடப்பது இன அழிப்புதான்.. ஐநா நிபுணர்கள் குழு அறிக்கை!
நியூயார்க்: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 45,000ஐ தொட்டிருக்கிறது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஐநா நிபுணர்களின் சிறப்பு குழு போர் குறித்து ஆய்வு செய்தது. ஆய்வில், இஸ்ரேல் பட்டினியை காசா மக்களுக்கு எதிரான போர் முறையாக பயன்படுத்தியதாகவும், இது இனி அழிப்பு முறையை ஒத்திருக்கிறது எனவும் தெரிவித்திருக்கிறது.
பாலஸ்தீனத்தில் ஒரு பகுதியாக இஸ்ரேல் உருவானதிலிருந்து, தனது எல்லையை இஸ்ரேல் தொடர்ந்து விரிவுப்படுத்தி வருகிறது. இதற்கு எதிராக போராடும் பாலஸ்தீன மக்கள், இஸ்ரேல் ராணுவத்தால் குறி வைக்கப்பட்டிருந்தனர். எனவே பாலஸ்தீனத்தில் விடுதலை இயக்கங்கள் உருவாகின. இதில் ஒன்றுதான் ஹமாஸ். ஆயுதம் ஏந்தி போராடும் இந்த அமைப்பு, அரசியல் தளத்திலும் செறிவுடன் இயங்கி வருகிறது. ஆனால், ஆயுதம் ஏந்தி இருப்பதால், இது தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளால் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது.

இந்த அமைப்பை சேர்ந்தவர்கள்தான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தினர். இதில் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்றாலும் கூட, இஸ்ரேலுக்கு இந்த தாக்குதல் பெரும் கவுரவ குறைவாக பார்க்கப்பட்டது. எனவே ஹமாஸை ஒழிப்பதே நோக்கம் என்று இஸ்ரேல் போரை அறிவித்தது. போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இதில் சுமார் 45,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கையில் சரிபாதி குழந்தைகள் மற்றும் பெண்கள் அடங்குவர்.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்த சொல்லி ஐநா மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இஸ்ரேல் இந்த தீர்மானத்தை ஏற்கவில்லை. இன்று வரை போர் நீடித்து வருகிறது. இப்படி இருக்கையில் இஸ்ரேல் சர்வதேச போர் விதிகளை மீறியிருப்பதாகவும், காசாவில் இன அழிப்பு நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தன. இது குறித்து விசாரிக்க ஐநா சிறப்பு நிபுணர்கள் குழு ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது அறிக்கையாக வெளியாகியுள்ளன.
அதில், இஸ்ரேல் பட்டினியை காசா மக்களுக்கு எதிரான போர் முறையாக பயன்படுத்தியுள்ளதாகவும், இது போன்ற நடைமுறைகள் இன அழிப்பு முறையை ஒத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
கண் கொத்தி பாம்பாக காத்திருக்கும் CIA & மொசாட்.. கொஞ்சம் அசந்தாலும் ஈரான் மொத்தமாக சிதஞ்சிடும் -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications