சண்டையிட்டது போதும்.. நிறுத்துங்கள்.. பாக் - இந்தியாவிற்கு அமெரிக்கா வேண்டுகோள்!
இந்தியா - பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு உடனடியாக பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நியூயார்க்: இந்தியா - பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு உடனடியாக பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே கடுமையான போர் பதற்றம் உருவாகி உள்ளது. எப்போது வேண்டுமானாலும் முழு போர் உருவாகலாம் என்றும் கூறுகிறார்கள்.
இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சனை உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. முக்கியமாக அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட இந்தியாவின் நட்பு நாடுகளை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

எல்லையில் ராணுவம்
அமெரிக்கா தனது அறிக்கையில், இந்தியா - பாக் இடையிலான சண்டை உடனே நிறுத்தப்பட வேண்டும். எல்லையில் நடக்கும் அனைத்து விதமான ராணுவா நடவடிக்கைகளும் உடனடியாக கைவிடப்பட வேண்டும். ராணுவ முகாம்கள் திரும்ப பெறப்பட வேண்டும்.

நாடுகள்
இரண்டு நாடுகளும் தாக்கிக் கொள்வதை நிறுத்த வேண்டும். உடனடியாக பதற்றத்தை தணிப்பதற்கான செயலில் நாடுகள் இறங்க வேண்டும். தொடர்ந்து செய்யப்படும் ராணுவம் நடவடிக்கைகள் இந்த பிரச்னையை இன்னும் மோசமாக்கும்.

பேச்சுவார்த்தை
ஆரோக்கியமான பேச்சுவார்த்தைக்கு நாடுகள் முயல வேண்டும். நேரடி பேச்சுவார்த்தை என்றால் கூட இந்தியா தயங்காமல் செய்ய வேண்டும். அமெரிக்கா இதற்கான உதவிகளை கண்டிப்பாக செய்யும்.

என்ன தீவிரவாதம்
உங்கள் பிராந்தியத்தில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும். சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதல்தான் இந்த பிரச்சனைக்கு அடிப்படை காரணம். பாகிஸ்தான் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் விதிகளை, ஒப்பந்தத்தை பின்பற்றி உடனடியாக தீவிரவாதத்திற்கு எதிராக செயல்பட வேண்டும்., என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications