அதுமட்டும் நடந்தால் சீனா அவ்வளவுதான்.. எச்சரிக்கை டிரம்ப்.. கோபத்தில் அமெரிக்கா!
அமெரிக்கா - சீனா இடையே நிலவி வரும் வர்த்தகப் போர் உச்சம் பெற தொடங்கி உள்ளது.
நியூயார்க்: அமெரிக்கா - சீனா இடையே நிலவி வரும் வர்த்தகப் போர் உச்சம் பெற தொடங்கி உள்ளது. இதையடுத்து சீனா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாளுக்கு நாள் அமெரிக்கா - சீனா என்ற உலகின் இரண்டு பெரிய வல்லரசுகளுக்கு இடையில் சண்டை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே உலக நாடுகளின் வரி விதிப்பு முறை குறித்து நிறைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்.

இதில் இந்தியா மீதும் சீனா மீதும் அவர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறது. அமெரிக்கா பிற நாடுகளின் பொருட்களுக்கு குறைவாக வரி விதிக்கிறது. ஆனால் அமெரிக்காவின் பொருட்களுக்கு பிற நாடுகள் அதிக வரி விதிக்கிறது என்று பலமுறை குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க பொருட்களுக்கு சீனாவில் 25% வரி விதிக்கப்படுகிறது. சீனாவில் அமெரிக்க பொருட்களுக்குத்தான் அதிக அளவில் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு 2.5% வரிதான் விதிக்கப்படுகிறது.
சீனா மீது இது தொடர்பாக அவர் அடிக்கடி குற்றஞ்சாட்டி வருகிறார். சீனாவில் அதிக அளவில் வரி விதிக்கப்படுகிறது, அதை குறைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் சீனா வரியை குறைக்கவில்லை என்பதால் அமெரிக்கா சீன பொருட்கள் மீதான வரியை அதிகரித்தது.
இந்த நிலையில் நேற்று இது தொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார்.
அதில், சீனா அமெரிக்க பொருட்களுக்கு தொடர்ந்து வரி அதிகம் வாங்குகிறது. மீண்டும் எதிர்க்கட்சி அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்தால், அமெரிக்காவை ஏமாற்றிவிடலாம் என்று சீனா நினைக்கிறது. ஆனால் நாங்கள்தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.
எங்களை சீனா ஏமாற்ற முடியாது. சீனா நமக்கு அதிக வரி விதித்தால் நாங்கள் அவர்களுக்கு அதிக வரி விதிப்போம். சீனா இப்போதே எங்களுடன் அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தினால் சமரசம் குறித்து யோசிக்கலாம்.
இல்லையென்றால், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும் போது சீனா மீது மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை உருவாகும். அது மட்டும் நடந்தால் சீனா பெரிய அளவில் பாதிக்கும், என்று டிரம்ப் கோபமாக குறிப்பிட்டுள்ளார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications