அமெரிக்காவில் டெக்சாஸில் பள்ளியில் புகுந்து துப்பாக்கிச் சூடு.. விசாரணையில் பகீர் தகவல்கள்
நியூயார்க்: அமெரிக்காவில் டெக்சாஸில் பள்ளியில் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர் குறித்து பரபரப்பு தகவல்கள வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணாத்திலுள்ள தொடக்க நிலைப் பள்ளியொன்றில் 18 வயது இளைஞர் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் பலியாகிவிட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சால்வடார் ராமோஸ் என்கிற இளைஞரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகளில் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

3 வயது குழந்தை
சால்வடார் ராமோஸ் 3 வயது இருக்கும் போதே அவரது தாயும் தந்தையும் பிரிந்துவிட்ட நிலையில் தாயின் பராமரிப்பில் இருந்துள்ளார். ராமோஸின் தாய் போதை பழக்கத்திற்கு அடிமையானதால் சிறு வயதிலேயே தாயின் அன்பும் அரவணைப்பும் ராமோஸுக்கு கிடைக்கவில்லை. ராமோஸை அவரது தாய் தினமும் அடித்து துன்புறுத்தினாராம்.

பாட்டி வளர்ப்பு
இதனால் தாயிடம் இருந்து பிரிந்து தனது பாட்டியுடன் ராமோஸ் வசித்து வந்தார். மேலும் ராமோஸுக்கு பேச்சு குறைபாடு இருந்ததால் சக மாணவர்கள் அவரை கேலி கிண்டல் செய்துள்ளனர். இதனால் தனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். இதனால் மிகவும் மனவேதனையடைந்தார்.

இன்ஸ்டா பதிவுகள்
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு 18 வயதானது சேமித்து வைத்திருந்த பணத்தில் 2 நவீன துப்பாக்கிகளை வாங்கினார் (அமெரிக்காவில் 18 வயது நிரம்பினால் துப்பாக்கி வாங்கிக் கொள்ள உரிமம் கிடைக்கும்). அதன்பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்துவது குறித்து இன்ஸ்டாகிராமில் மறைமுகமாக பல பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார்.

பள்ளிக் கூடத்தில் கொடூர தாக்குதல்
இதைத் தொடர்ந்து பள்ளிக் கூடத்துக்குள் புகுந்து கொடூர தாக்குதலில் ஈடுபட்ட ராமோஸ் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் படத்தில் ஒரு ராட்சசன் பள்ளி மாணவிகளை கடத்தி கொடூரமாக கொலை செய்கிறான் ஒரு சைக்கோ. அந்த காட்சிகளை இந்த அமெரிக்கா சம்பவம் நினைவுப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications