கொடைக்கானல் போறவங்க மறந்துடாதீங்க! கலெக்டரிடம் இருந்து பறந்த உத்தரவு! சுற்றுலா பயணிகளுக்கு வார்னிங்
நீலகிரி: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை விற்பனை செய்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ 20 ரூபாய் பசுமை வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது.
மலைகளின் இளவரசி என கொடைக்கானல் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த கோடை வாசஸ்தலமான கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களில் அலை மோதும். குறிப்பாக கோடை காலங்களில் மக்கள் வெயிலில் இருந்து தப்பிக்க கொடைக்கானலில் முகாமிடுவார்கள். இதனால் கோடைக்காலங்களில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமல் இருக்க சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் போன்ற சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பொருட்களை கொண்டு வராமல் தடுக்க வனத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இதற்காக கொடைக்கானல் செல்லும் மலையடிவாரத்திலும், நகருக்குள் நுழையும் போதும் சுற்றுலா பயணிகளிடம் சோதனை செய்யப்பட்டு பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தற்போது 5 லிட்டருக்கும் குறைவான பிளாஸ்டிக் பாட்டிலை கொடைக்கானல் பகுதியில் வைத்திருந்தால், அதாவது விற்பனை செய்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ இதற்கு வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடைகானல் பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களிடம் ரூ.20 பசுமை வரியாக விதிக்கப்படும். இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி கூறுகையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை, 5 லிட்டருக்கு குறைவான தண்ணீர் அல்லது குளிர்பான பாட்டில்களை விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ ரூ.20 பசுமை வரி விதிக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனவே இதனை மீறி பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்திருப்பவர்களிடம் ரூ.20 பசுமை வரியாக விதிக்கப்படும். இதற்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி இனிமேல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் 5 லிட்டருக்கு குறைவான தண்ணீர், குளிர்பான பாட்டில்களை வைத்திருந்தால் 20 ரூபாய் பசுமை வரியாக விதிக்கப்படும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications