Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடைக்கானல் போறவங்க மறந்துடாதீங்க! கலெக்டரிடம் இருந்து பறந்த உத்தரவு! சுற்றுலா பயணிகளுக்கு வார்னிங்

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை விற்பனை செய்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ 20 ரூபாய் பசுமை வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது.

மலைகளின் இளவரசி என கொடைக்கானல் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த கோடை வாசஸ்தலமான கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களில் அலை மோதும். குறிப்பாக கோடை காலங்களில் மக்கள் வெயிலில் இருந்து தப்பிக்க கொடைக்கானலில் முகாமிடுவார்கள். இதனால் கோடைக்காலங்களில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

kodaikanal plastic dindigul

சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமல் இருக்க சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் போன்ற சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பொருட்களை கொண்டு வராமல் தடுக்க வனத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இதற்காக கொடைக்கானல் செல்லும் மலையடிவாரத்திலும், நகருக்குள் நுழையும் போதும் சுற்றுலா பயணிகளிடம் சோதனை செய்யப்பட்டு பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தற்போது 5 லிட்டருக்கும் குறைவான பிளாஸ்டிக் பாட்டிலை கொடைக்கானல் பகுதியில் வைத்திருந்தால், அதாவது விற்பனை செய்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ இதற்கு வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடைகானல் பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களிடம் ரூ.20 பசுமை வரியாக விதிக்கப்படும். இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி கூறுகையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை, 5 லிட்டருக்கு குறைவான தண்ணீர் அல்லது குளிர்பான பாட்டில்களை விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ ரூ.20 பசுமை வரி விதிக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே இதனை மீறி பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்திருப்பவர்களிடம் ரூ.20 பசுமை வரியாக விதிக்கப்படும். இதற்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி இனிமேல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் 5 லிட்டருக்கு குறைவான தண்ணீர், குளிர்பான பாட்டில்களை வைத்திருந்தால் 20 ரூபாய் பசுமை வரியாக விதிக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+