Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

9 வயது சிறுமி.. ஜாமீனில் வந்தும் சேட்டை.. பாலியல் பலாத்காரம் செய்த கயவனுக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 32 ஆண்டு சிறை தண்டனை விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரியில் 9 வயது சிறுமி, அப்பகுதியைச் சேர்ந்த 2 கொடூரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. சிறுமியைச் சிதைத்த காமுகன்களை தூக்கில் போட வேண்டும் என புதுச்சேரி மக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்தடுத்து 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த கயவனுக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

32 years jail sentence for a rapist who raped 9 years old girl in ooty

கடந்த 2022ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் உதகை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட அஜித், மனநிலை பாதிப்பு இருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியே வந்தார்.

ஜாமீனில் வெளியே வந்த அஜித் குமார் மீண்டும் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் கூலி தொழிலாளி தம்பதியரின் 9 வயது மகள், தனியார் பள்ளியில் படித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் அங்குள்ள கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் தோழிகளுடன் கலந்து கொண்டு, மாலை சிறுமி வீடு திரும்பிக் கொண்டிருந்தார் அந்தச் சிறுமி. அப்போது, அஜித், அந்தச் சிறுமியை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

சிறுமியை பொதுமக்கள் மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே, பொதுமக்கள் சிலர் விரட்டிச் சென்று அஜித்தை பிடித்து தாக்கி, புதுமந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, புது மந்து காவல் நிலைய போலீசார், போக்சோ உட்பட 6 பிரிவுகளில் அஜித் மீது வழக்கு பதிவு செய்து அவரை மீண்டும் கைது செய்தனர். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், அஜித் குமார் 2022ல் பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கு விசாரணை உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. போச்கோ சட்டத்தில் கைதான அஜித் குமாருக்கு இன்று தண்டனை அறிவித்தது உதகை மகளிர் நீதிமன்றம். 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த அஜித் குமாருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் மற்றொரு சிறுமியை அஜித் குமார் பலாத்காரம் செய்த வழக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+