9 வயது சிறுமி.. ஜாமீனில் வந்தும் சேட்டை.. பாலியல் பலாத்காரம் செய்த கயவனுக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை
நீலகிரி: 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 32 ஆண்டு சிறை தண்டனை விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரியில் 9 வயது சிறுமி, அப்பகுதியைச் சேர்ந்த 2 கொடூரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. சிறுமியைச் சிதைத்த காமுகன்களை தூக்கில் போட வேண்டும் என புதுச்சேரி மக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்தடுத்து 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த கயவனுக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் உதகை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட அஜித், மனநிலை பாதிப்பு இருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியே வந்தார்.
ஜாமீனில் வெளியே வந்த அஜித் குமார் மீண்டும் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் கூலி தொழிலாளி தம்பதியரின் 9 வயது மகள், தனியார் பள்ளியில் படித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் அங்குள்ள கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் தோழிகளுடன் கலந்து கொண்டு, மாலை சிறுமி வீடு திரும்பிக் கொண்டிருந்தார் அந்தச் சிறுமி. அப்போது, அஜித், அந்தச் சிறுமியை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
சிறுமியை பொதுமக்கள் மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே, பொதுமக்கள் சிலர் விரட்டிச் சென்று அஜித்தை பிடித்து தாக்கி, புதுமந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, புது மந்து காவல் நிலைய போலீசார், போக்சோ உட்பட 6 பிரிவுகளில் அஜித் மீது வழக்கு பதிவு செய்து அவரை மீண்டும் கைது செய்தனர். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அஜித் குமார் 2022ல் பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கு விசாரணை உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. போச்கோ சட்டத்தில் கைதான அஜித் குமாருக்கு இன்று தண்டனை அறிவித்தது உதகை மகளிர் நீதிமன்றம். 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த அஜித் குமாருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் மற்றொரு சிறுமியை அஜித் குமார் பலாத்காரம் செய்த வழக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications