நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிசயமான பீட்ரூட்.. ஆச்சரியத்தில் அதிர வைத்த தம்பதி
ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த அருவங்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ்-வள்ளி என்ற தம்பதிக்கு இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஆர்வம் காட்டி வந்தார்கள். இதற்காக தோட்டம் அமைத்து பீட்ரூட் சாகுபடி செய்தனர். பீட்ரூட் நன்கு விளைந்ததும் பீட்ரூட்களை அறுவடை செய்தார்கள். ஆனால் பொதுவாக ஒரு கிலோவுக்கு சுமார் 5 பீட்ரூட்டுகள் இருக்கும் நிலையில், இவர்களுடைய தோட்டத்தில் விளைந்த ஒரு பீட்ரூட் சுமார் 1½ கிலோ எடையில் இருந்தது. இதை கண்டு பலர் வியந்து போனார்கள்.
இன்று பலரும் இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.ஆனால் மகசூல் பெரிய அளவில் இருக்காது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. இந்த சூழலில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஒரு விவசாயி இயற்கை முறையில் பீட்ரூட் விளைவித்துள்ளார். அது யாருமே எதிர்பார்க்காத எடையில் விளைந்திருக்கிறது.

பொதுவாகவே பீட்ரூட் குளிர்ச்சியான காலநிலையை விரும்பும் ஒரு பயிர் ஆகும். குறிப்பாக அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான காலம் இதற்கு மிகச்சிறந்தது என்பதால் இந்த காலக்கட்டத்தில், இயற்கை முறையில் பீட்ரூட் சாகுபடி செய்வது அதிகமாக உள்ளது. பீட்ரூட் வேர் பயிர் என்பதால், மண் இறுக்கமாக இருக்கக்கூடாது.
மணல் கலந்த வண்டல் மண் அல்லது பொலபொலப்பான செம்மண் சிறந்தது. அதில் தான் அதிகம் விளையும். மட்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரம் இட்டு மண்ணைக் கிளறுவார்கள். இயற்கை முறையில் விவசாயம் செய்யும்போது, நிலத்தை தயார் செய்யும்போது பஞ்சகவ்யா அல்லது ஜீவாமிர்தம் தெளிப்பது மண்ணின் நுண்ணுயிர் பெருக்கத்திற்கு உதவுவார்கள்.
பீட்ரூட்டில் பொதுவாக பூச்சித் தாக்குதல் குறைவு. ரசாயன உரங்கள் இன்றி வளர்க்கப்படும் பீட்ரூட் அதிக இனிப்புச் சுவையுடன் இருக்கும் என்கிறார்கள். தற்போது இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளுக்கு நகரங்களில் நல்ல விலை கிடைக்கிறது. இதனால் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த அருவங்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ்-வள்ளி என்ற தம்பதிக்கு இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஆர்வம் காட்டி வந்தார்கள். இதற்காக தோட்டம் அமைத்து பீட்ரூட் சாகுபடி செய்தனர். பீட்ரூட் நன்கு விளைந்ததும் பீட்ரூட்களை அறுவடை செய்தார்கள். ஆனால் பொதுவாக ஒரு கிலோவுக்கு சுமார் 5 பீட்ரூட்டுகள் இருக்கும் நிலையில், இவர்களுடைய தோட்டத்தில் விளைந்த ஒரு பீட்ரூட் சுமார் 1½ கிலோ எடையில் இருந்தது
இதுகுறித்து அந்த தம்பதி கூறுகையில், நாங்கள் எந்த வித வீரிய விதைகள் மற்றும் ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல், இயற்கை முறையில் சாகுபடி செய்தோம். ஒரு பீட்ரூட் 1½ கிலோ எடையில் விளைந்து இருப்பது எங்களுக்கு ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது
நாங்கள் விளைவித்த பீட்ரூட்டுகளை விற்பனைக்கு கொடுக்காமல் உறவினர்கள், தெரிந்தவர்கள், அண்டை வீட்டுக்காரர்களுக்கு கொடுத்து வருகிறோம். மேலும் இயற்கை முறையில் பெரிய அளவில் விவசாயம் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். அதில் பீட்ரூட் மட்டுமல்லாமல் அனைத்து காய்கறிகளையும் பயிரிட முடிவு செய்துள்ளோம். ரசாயன பயன்பாட்டை குறைத்து இயற்கை முறையில் விவசாயம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications