நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிசயமான பீட்ரூட்.. ஆச்சரியத்தில் அதிர வைத்த தம்பதி
ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த அருவங்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ்-வள்ளி என்ற தம்பதிக்கு இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஆர்வம் காட்டி வந்தார்கள். இதற்காக தோட்டம் அமைத்து பீட்ரூட் சாகுபடி செய்தனர். பீட்ரூட் நன்கு விளைந்ததும் பீட்ரூட்களை அறுவடை செய்தார்கள். ஆனால் பொதுவாக ஒரு கிலோவுக்கு சுமார் 5 பீட்ரூட்டுகள் இருக்கும் நிலையில், இவர்களுடைய தோட்டத்தில் விளைந்த ஒரு பீட்ரூட் சுமார் 1½ கிலோ எடையில் இருந்தது. இதை கண்டு பலர் வியந்து போனார்கள்.
இன்று பலரும் இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.ஆனால் மகசூல் பெரிய அளவில் இருக்காது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. இந்த சூழலில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஒரு விவசாயி இயற்கை முறையில் பீட்ரூட் விளைவித்துள்ளார். அது யாருமே எதிர்பார்க்காத எடையில் விளைந்திருக்கிறது.

பொதுவாகவே பீட்ரூட் குளிர்ச்சியான காலநிலையை விரும்பும் ஒரு பயிர் ஆகும். குறிப்பாக அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான காலம் இதற்கு மிகச்சிறந்தது என்பதால் இந்த காலக்கட்டத்தில், இயற்கை முறையில் பீட்ரூட் சாகுபடி செய்வது அதிகமாக உள்ளது. பீட்ரூட் வேர் பயிர் என்பதால், மண் இறுக்கமாக இருக்கக்கூடாது.
மணல் கலந்த வண்டல் மண் அல்லது பொலபொலப்பான செம்மண் சிறந்தது. அதில் தான் அதிகம் விளையும். மட்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரம் இட்டு மண்ணைக் கிளறுவார்கள். இயற்கை முறையில் விவசாயம் செய்யும்போது, நிலத்தை தயார் செய்யும்போது பஞ்சகவ்யா அல்லது ஜீவாமிர்தம் தெளிப்பது மண்ணின் நுண்ணுயிர் பெருக்கத்திற்கு உதவுவார்கள்.
பீட்ரூட்டில் பொதுவாக பூச்சித் தாக்குதல் குறைவு. ரசாயன உரங்கள் இன்றி வளர்க்கப்படும் பீட்ரூட் அதிக இனிப்புச் சுவையுடன் இருக்கும் என்கிறார்கள். தற்போது இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளுக்கு நகரங்களில் நல்ல விலை கிடைக்கிறது. இதனால் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த அருவங்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ்-வள்ளி என்ற தம்பதிக்கு இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஆர்வம் காட்டி வந்தார்கள். இதற்காக தோட்டம் அமைத்து பீட்ரூட் சாகுபடி செய்தனர். பீட்ரூட் நன்கு விளைந்ததும் பீட்ரூட்களை அறுவடை செய்தார்கள். ஆனால் பொதுவாக ஒரு கிலோவுக்கு சுமார் 5 பீட்ரூட்டுகள் இருக்கும் நிலையில், இவர்களுடைய தோட்டத்தில் விளைந்த ஒரு பீட்ரூட் சுமார் 1½ கிலோ எடையில் இருந்தது
இதுகுறித்து அந்த தம்பதி கூறுகையில், நாங்கள் எந்த வித வீரிய விதைகள் மற்றும் ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல், இயற்கை முறையில் சாகுபடி செய்தோம். ஒரு பீட்ரூட் 1½ கிலோ எடையில் விளைந்து இருப்பது எங்களுக்கு ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது
நாங்கள் விளைவித்த பீட்ரூட்டுகளை விற்பனைக்கு கொடுக்காமல் உறவினர்கள், தெரிந்தவர்கள், அண்டை வீட்டுக்காரர்களுக்கு கொடுத்து வருகிறோம். மேலும் இயற்கை முறையில் பெரிய அளவில் விவசாயம் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். அதில் பீட்ரூட் மட்டுமல்லாமல் அனைத்து காய்கறிகளையும் பயிரிட முடிவு செய்துள்ளோம். ரசாயன பயன்பாட்டை குறைத்து இயற்கை முறையில் விவசாயம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications