ஊட்டி ரோட்டில் பார்த்தீங்களா.. எலும்பை உறைய வைக்கும் உறைபனி.. குளிரும் குன்னூர்.. தமிழ்நாடே "உதறுது"
ஊட்டி: கடந்த 2 நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் உறைபனி சூழ்ந்துள்ள நிலையில், பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளார்கள்.
சென்னை வானிலை மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமிழகம் முழுவதுமே அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும், நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரத்தில் ஓரிரு இடங்களில் உறைபனி பொழியும் என்று கூறியிருந்தது.

நீலகிரி: அதன்படியே, நீலகிரி மாவட்டத்தில் கடும்பனி நிலவி கொண்டிருக்கிறது.. கடந்த 2 மாத காலமாகவே, பனிப்பொழிவும், சாரல் மழையும் பெய்தபடியே உள்ளது.. வழக்கமாக, நவம்பர் மாத துவக்கத்திலேயே, குளிர் அதிகமாகிவிடும்.. டிசம்பர் மாதம் முழுவதுமே நீலகிரியில் கடும் பனி பாதித்தது.. மாவட்ட மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.
இந்த ஒரு வார காலமாக, இந்த உறைபனி அதிகரித்துள்ளது.. விடிகாலை 5 மணியிலிருந்து காலை 8 மணி வரையில், பனி விலகாமல், சாலைகளில் உறைபனி விழுந்துகிடக்கிறது. இதனால், சாலைகளில் வரும் வாகனங்களும், பனிமூட்டத்தில் தெரிவதில்லை. அதனால் வண்டிகளில் லைட்டுகளை எரியவிட்டு வாகன ஓட்டிகள் செல்கிறார்கள்..
சாம்பல் நிறம்: நீலகிரி மாவட்ட பூங்காக்களில் புல்வெளிகள் சாம்பல் நிறத்தில் பூத்து போயுள்ளன.. தார் ரோடுகளில் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காணப்படுகிறது.. இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களில் உறைபனி கொட்டி கிடக்கிறது.. காணப்படவில்லை.. மலைக்காய்கறிகளும் உறைபனியில் மூழ்கிவிடுகிறது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உறைபனியால், உள்ளூர் மக்கள் முதல் சுற்றுலா பயணிகள் வரை அவதிக்கு ஆளாகி உள்ளனர். பனி, குளிர் காரணமாக, மாவட்ட மக்கள் வீட்டுக்கு வெளியே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் தங்கும் இடங்களிலிருந்து வெளியே வராமல் முடங்கி கிடக்கிறார்கள்.
சாரல் மழை: மற்றொருபக்கம் சாரல் மழையும் பெய்துவருவதால், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.. இந்த முறை, நீலகிரியில் புத்தாண்டு கொண்டாட்டமும் அவ்வளவாக காணப்படவில்லை.. புத்தாண்டு முடிந்து சொந்த ஊர்களுக்கு கிளம்பி செல்வதால், உறைபனியால் வாகனங்கள் வேகமாக செல்ல முடியவில்லை.. எப்படியும் இந்த மாத இறுதிவரை மாவட்டத்தில் உறைபனி நீடிக்கலாம் என தெரிகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications