குழந்தை உட்பட 2 பேரை கொன்று மக்களை அலறவிட்ட சிறுத்தை.. மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை! எப்படி?
நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் குழந்தை உட்பட 2 பேரை கொன்ற சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. புதரில் மறைந்திருந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி பந்தலூர் அருகே ஏலமன்னா மற்றும் மேங்கோ ரேஞ்ச் பகுதியில் சிறுத்தை தாக்கி ஒரு பெண்மணி மற்றும் மூன்று வயது சிறுமி என இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சிறுத்தை தாக்குதலில் நான்கு பேர் இதுவரை காயமடைந்ததுள்ளனர். சிறுத்தையின் அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

மேங்கோ ரேஞ்ச் பகுதி அங்கன்வாடியில் இருந்து தனது தாயுடன் சிறுமி வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, தேயிலை தோட்டத்தில் மறைந்திருந்த சிறுத்தை தாயின் கண்முன்னே சிறுமியை தாக்கி இழுத்துச் சென்றது. தாயின் அலறல் சத்தம் கேட்டு வந்த தொழிலாளர்கள், தேயிலை தோட்டம் முழுவதும் சிறுமியை தேடினர். பின்னர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி, பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுமி உயிரிழந்தார்.
2 பேரை கொன்ற சிறுத்தையை ஆட்கொல்லி சிறுத்தையாக அறிவித்து சுட்டுப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நேற்று மாலை முதல் கூடலூர், பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இரவு முழுவதும் தொடர்ந்து சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். கூடலூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தனர். அதன்படி, கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இன்று அடைக்கப்பட்டுள்ளன.

சிறுத்தையை சுட்டுப் பிடிக்க வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க 2 வனக் கால்நடை மருத்துவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட வனத் துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தையை பிடிக்க 6 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பந்தலூர் பகுதியில் குழந்தை உட்பட 2 பேரை தாக்கிக் கொன்ற சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மேலும், டிரோன் மூலம் சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில் மேங்கே ரேஞ்ச் பகுதியில் ஆம்ப்ரஸ் என்ற இடத்தில் சிறுத்தை பிடிபட்டது.
மயக்க நிலையில் புதரில் பதுங்கி இருந்த சிறுத்தையை வனத்துறையினர் வலை மூலம் பிடித்து கூண்டில் அடைத்தனர். அந்த சிறுத்தை முதுமலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. 2 பேரை கொன்ற சிறுத்தை பிடிபட்டுள்ளது, அப்பகுதி மக்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. இந்த சிறுத்தை தாக்கியதில் பலியான 2 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications