Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பறந்த நோட்டீஸ்.. ஆர்எஸ்எஸ் ஆலோசனைக்கு இடமளித்த ஊட்டி தனியார் பள்ளிக்கு சிக்கல்.. நீலகிரியில் அதிரடி

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆலோசனை கூட்டத்துக்கு இடமளித்த தனியார் பள்ளி சிக்கலை சந்தித்துள்ளது. அதாவது ஆர்எஸ்எஸ் ஆலோசனைக்காக ஒருவாரம் வரை பள்ளிக்கு விடுமுறை வழங்கிய நிலையில் கல்வித்துறை அதிரடி நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் தேசிய அளவிலான ஆலோசனை மற்றும் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.

In Nilgris Ooty private school gets notice from education department after gives place to RSS Conclave

அதன்படி இந்த ஆர்எஸ்எஸ் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் வந்து பங்கேற்றனர். நேற்று 2வது நாளாக மாநாடு நடந்தது. இன்று கடைசி நாள் ஆலோசனை நடக்கிறது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரதிய பிராண்ட் பிரசாரக் பைதக் என்ற பெயரில் இந்த 3 நாள் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபெலே உள்பட தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடு, அமைப்பு செயல்படுவதில் உள்ள பிரச்சனை, எதிர்கால வியூகம் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டது. கடைசி நாளான இன்று மோகன் பாகவத், தத்தாத்ரேய ஹொசபெலே உள்ளிட்டவர்கள் முக்கிய அறிவுரைகளை வழங்க உள்ளனர்.

இந்நிலையில் தான் ஆர்எஸ்எஸ் ஆலோசனை கூட்டத்துக்காக பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு ஒரு வாரம் வரை விடுமுறை வழங்கி உள்ளதாக புகார்கள் எழுந்தன. இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையை தொடர்ந்து தான் தனியார் பள்ளி சிக்கலில் சிக்கி உள்ளது.

அதாவது சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு மாவட்ட கல்வித்துறை அதிகாரி சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீசுக்கு பள்ளி விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்தால் பிரச்சனையில்லை. மாறாக கல்வித்துறை அதிகாரியால் ஏற்க முடியாத வகையில் இருந்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கை உறுதியாக இருக்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+