Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தோண்டித் துருவும் சிபிசிஐடி.. பூசாரி, 2 வங்கி ஊழியர்களிடம் விசாரணை!

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி போலீசார் முன்பாக, கோடநாடு எஸ்டேட் கோயில் பூசாரி விக்னேஷ், தனியார் வங்கி ஊழியர்கள் 2 பேர் ஆஜராகியுள்ளனர். கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் 3 பேரும் இன்று விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இரவு காவலாளி ஓம் பகதூர் படுகொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் சில பொருட்கள் கொள்ளை போயின. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

kodanad cbcid kodanad murder case

அடுத்த சில நாட்களில் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம் அருகே ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். இது விபத்து அல்ல, கொலை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதைத்தொடர்ந்து, அதே ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராக இருந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்த மரணங்கள் கோடநாடு வழக்கில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தின.

இது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 19 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 500க்கும் மேற்பட்டவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த வரிசையில், கொடநாடு எஸ்டேட்டில் பல ஆண்டுகளாக கோவில் பூசாரியாக இருந்து வரும் கோத்தகிரியை சேர்ந்த விக்னேஷ் என்ற நபருக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பிருந்தனர். அதன்படி கொடநாடு எஸ்டேட் கோவில் பூசாரி விக்னேஷ் இன்று கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

இதே போல புதுச்சேரி மாநில வங்கி மேலாளருக்கும் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். வங்கி மேலாளர் உள்ளிட்ட 2 பேர் கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் அமைந்துள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் வங்கி பரிவர்த்தனைகள் தொடர்பாக 26 வங்கிகளிடம் தகவல் கோரப்பட்ட நிலையில், சம்பவம் நடந்த காலத்தில் பணியில் இருந்த 2 வங்கு அலுவலர்கள் தற்போது விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

இவர்களிடம் டிஎஸ்பி சந்திரசேகர் மற்றும் அண்ணாதுரை தலைமையிலான சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட கணினி ஆபரேட்டர் தினேஷின் செல்போன் குறித்து அவரது தந்தையிடம் சிபிசிஐடி போலீசார் அண்மையில் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+