Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊட்டியில் உறைபனி.. மைனஸ் டிகிரியில் நீலகிரி.. இப்பவே உதறுது.. இது வேறயா.. திடீர்னு வந்த "இடி" தகவல்

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: நீலகிரியில் கடுமையான பனி கொட்டி வருகிறது.. உறைபனியில் ஊட்டி உறைந்து கொண்டிருக்கிறது.. இப்படியே போனால், மைனஸ் டிகிரியில் குளிர் வாட்டக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரியை பொறுத்தவரை, நவம்பர் மாதமே குளிர் துவங்கிவிடும்.. நவம்பர் இறுதியில் ஆரம்பித்த குளிர், டிசம்பர் மாதமும் வலுவாகி, ஜனவரியில் அதிகரித்து மார்ச் முதல் வாரம் வரை தொடர்வது வாடிக்கையான ஒன்று.

உறைபனி: ஆனால், இந்த வருடம் வழக்கத்துக்கு மாறாக உறைபனி தாமதமாக தொடங்கியது.. காரணம், கடந்த வருடம் அதிக அளவு மழை நாட்கள் இருந்ததாலும், மற்றும் மேகமூட்டம் காரணமாகவும் உறைபனி தாமதமானது.. நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில்கூட உறைபனி குறைவாகவே இருந்தது.. ஆனால், டிசம்பர் மாதம் செல்ல செல்ல, பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.

Ooty in Nilgiris District and People suffer due to heavy fog freezes at 2.8 degree celsius cold temperature

இதனால் காலை நேரங்களில் அன்றாட பணிக்கு செல்வோர் உறைபனியால் காலதாமதமாக செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு கொட்டி வருவதால், இரவு நேரங்களில் பெய்யும் பனிப்பொழிவானது, காலை 8 மணி வரை நீடித்து வருகிறது..

வெறிச்சோடிய சாலைகள்: சாயங்கால நேரங்களில் சீக்கிரமாகவே சாலைகள் வெறிச்சோடி விடுகின்றன.. சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவருமே கடும் குளிரால் நடுநடுங்கும் சூழல் உள்ளது..

காலை 8 மணி வரையில், பனி விலகாமல், சாலைகளில் உறைபனி கொட்டி கிடப்பதால், சாலைகளில் வரும் வாகனங்களும், பனிமூட்டத்தில் தெளிவாக தெரிவதில்லை. புல்வெளிகளில் சாம்பல் நிறத்தில் பூத்து போயுள்ளன.. தார் ரோடுகளில் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல பனி படர்ந்து காணப்படுகிறது.. இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களிலும், பனி மூழ்கிவிடுகிறது. மலைக்காய்கறிகளும் உறைபனியில் மூழ்கிவிடுன்றன.

காலநிலை: மந்தமான கால நிலை காரணமாக, குன்னூர் - மேட்டுபாளையம் ரோட்டில், வாகன ஓட்டிகள், வண்டிகளில் லைட்டுகளை ஒளிர விட்டபடியே மெதுவாக ஓட்டிச் செல்கிறார்கள்.. உறைபனியால், மாவட்ட மக்கள் வீட்டுக்கு வெளியே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். இந்த குளிரால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.. சுற்றுலா பயணிகள் தங்கும் இடங்களிலிருந்து வெளியே வராமல் முடங்கி கிடக்கிறார்கள்.

வருட துவக்கத்தின் முதல் நாளே வெப்பநிலை 4.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.. தலைகுந்தா, அவலாஞ்சி, முக்கூர்த்தி, கேத்தி பள்ளத்தாக்கு உட்பட்ட பகுதிகளில் வெப்பநிலை பூஜ்ஜியத்தையும் எட்டியிருந்தது..

உறைபனி: இன்று அதிகாலை வெப்பநிலை, வெகுவாக குறைந்துவிட்டது.. ஊட்டி தாவரவியல் பூங்கா, ரேஸ்கோர்ஸ், ரோஜா பூங்கா, தலைகுந்தா, கேத்தி, லவ்டேல் பகுதிகளில் வெட்பநிலை 2.8 ஆக பதிவாகியிருக்கிறது.. இங்கெல்லாம் கடுமையான உறைபனி நிலவியது. உறைபனி தாமதமாக தொடங்கினாலும் அதன் தாக்கம் அதிகமாக இருப்பதாக நீலகிரி மக்கள் சொல்வார்கள்

தாவரங்கள் மற்றும் புல்வெளிகளும் தொடர்ந்து கருகி வருவதால், வனங்களில் பசுமை குறைந்து வனவிலங்குகள் இடம் பெயரவும் வாய்ப்புள்ளதாகவும் மாவட்ட மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். உறைபனி குறித்து இந்திய மண் மற்றும் நீர்வளப்பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் இதுகுறித்து முக்கிய அலர்ட் ஒன்றை விடுத்துள்ளனர்.

மைனஸ்: "கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகம் காணப்படும்.. கூடலூர், பந்தலூர் பகுதிகளைவிட, ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் இந்த வருடம் கடுமையான உறைபனி நிலவும் வாய்ப்புள்ளது.. மேக மூட்டமின்றி தொடர்ந்து காணப்பட்டால் வெப்பநிலை மைனஸில் செல்லவும் வாய்ப்புள்ளது" என்றனர்.

இப்பவே குளிரில் நீலகிரி நடுங்கிவரும்நிலையில் மைனஸ் டிகிரிக்கு செல்லக்கூடும் என்று ஆய்வாளர்கள் சொல்லி உள்ளதால், மலைமக்கள் கதிகலங்கி போயிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+