நீலகிரி மாவட்டத்தில் மாஸ்க் அணியாதவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை... கலெக்டர் அதிரடி அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் இன்னசன்ட் திவ்யா அதிரடியாக அறிவித்துள்ளார்.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு ரூ.200 அபராதமும் விதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா ஆட்டம் போட்டு வருகிறது தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் 500-க்குள் இருந்த பாதிப்புகள் தற்போது 600-க்கும் மேல் சென்று விட்டது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிக பாதிப்புகள் தொடர்ந்து பதிவாகி வருகிறது.

Those who do not wear masks in Nilgiris are sentenced to 6 months in prison

கோவையின் அண்டை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திலும் கொரோனா அச்சறுத்தி வருகிறது. மலை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டம் புகழ்பெற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்குள்ள ஊட்டி(உதகமண்டலம்), குன்னூர், கோத்தகிரி, கூடலூர் என அனைத்து இடங்களும் சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக விளங்கி வருகிறது.

குறிப்பாக ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மாஸ்க் அணிதல் உள்ளிட்டட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் இன்னசன்ட் திவ்யா அதிரடியாக அறிவித்துள்ளார்.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு ரூ.200 அபராதமும் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். பொது சுகாதார சட்டத்தின் கீழ் இந்த சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் கூறியுளளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+