பறிபோன 9 உயிர்.. குன்னூர் பஸ் விபத்துக்கு காரணம் இதுதான்! காவல்துறை சொன்ன ஷாக் தகவல்! முழுவிபரம்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த சுற்றுலா பஸ் விபத்தில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 9 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் விபத்துக்கான காரணம் குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் போலீசாரின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் தான் நேற்று இரவு குன்னூர் மேட்ப்பாளையம் மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

மரப்பாலம் அருகே வளைவில் இந்த சுற்றுலா பஸ் திரும்பியபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. மேலும் கண்இமைக்கும் நொடியில் பஸ் சாலை தடுப்பு சுவரை இடித்து கொண்டு பள்ளத்துக்குள் பாய்ந்தது.
இந்த பஸ்சில் மொத்தம் 59 பேர் பயணித்த நிலையில் அவர் கூச்சலிட்டனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள், தீயணைப்பு வீரர்கள் என அனைவரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கயிறு கட்டி பேருந்தில் சிக்கியவர்களை மீட்டனர். அப்போது சம்பவ இடத்தில் 3 பேர் பலியானது தெரியவந்தது.
மேலும் 40க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 6 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை என்பது 9 ஆக அதிகரித்தது. மேலும் விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்துவிட்டு சொந்த ஊர் திரும்பியபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. மேலும் விபத்தில் முப்புடாதி (வயது 67), முருகேசன் (வயது 65), இளங்கோ (64), தேவிகலா (வயது 42), கௌசல்யா (வயது 29), செல்வன், நிதின் உள்பட 9 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது வருகி்றது.
இந்நிலையில் தான் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் ஓட்டுநரின் அஜாக்கிரதையே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு விபத்தில் 9 பேர் பலியான நிலையில், 43 பேர் படுகாயமடைந்துள்ளனர். 9 பேர் காயமின்றி தப்பினர் என கூறப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக சுற்றுலா பஸ் உரிமையாள், 2 ஓட்டுனர்கள், சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications