Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பறிபோன 9 உயிர்.. குன்னூர் பஸ் விபத்துக்கு காரணம் இதுதான்! காவல்துறை சொன்ன ஷாக் தகவல்! முழுவிபரம்

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த சுற்றுலா பஸ் விபத்தில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 9 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் விபத்துக்கான காரணம் குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் போலீசாரின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் தான் நேற்று இரவு குன்னூர் மேட்ப்பாளையம் மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

What is main reason for Coonoor Bus accident which killed 9 people? Police report says this

மரப்பாலம் அருகே வளைவில் இந்த சுற்றுலா பஸ் திரும்பியபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. மேலும் கண்இமைக்கும் நொடியில் பஸ் சாலை தடுப்பு சுவரை இடித்து கொண்டு பள்ளத்துக்குள் பாய்ந்தது.

இந்த பஸ்சில் மொத்தம் 59 பேர் பயணித்த நிலையில் அவர் கூச்சலிட்டனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள், தீயணைப்பு வீரர்கள் என அனைவரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கயிறு கட்டி பேருந்தில் சிக்கியவர்களை மீட்டனர். அப்போது சம்பவ இடத்தில் 3 பேர் பலியானது தெரியவந்தது.

மேலும் 40க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 6 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை என்பது 9 ஆக அதிகரித்தது. மேலும் விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்துவிட்டு சொந்த ஊர் திரும்பியபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. மேலும் விபத்தில் முப்புடாதி (வயது 67), முருகேசன் (வயது 65), இளங்கோ (64), தேவிகலா (வயது 42), கௌசல்யா (வயது 29), செல்வன், நிதின் உள்பட 9 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது வருகி்றது.

இந்நிலையில் தான் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் ஓட்டுநரின் அஜாக்கிரதையே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு விபத்தில் 9 பேர் பலியான நிலையில், 43 பேர் படுகாயமடைந்துள்ளனர். 9 பேர் காயமின்றி தப்பினர் என கூறப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக சுற்றுலா பஸ் உரிமையாள், 2 ஓட்டுனர்கள், சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+