பறிபோன 9 உயிர்.. குன்னூர் பஸ் விபத்துக்கு காரணம் இதுதான்! காவல்துறை சொன்ன ஷாக் தகவல்! முழுவிபரம்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த சுற்றுலா பஸ் விபத்தில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 9 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் விபத்துக்கான காரணம் குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் போலீசாரின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் தான் நேற்று இரவு குன்னூர் மேட்ப்பாளையம் மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

மரப்பாலம் அருகே வளைவில் இந்த சுற்றுலா பஸ் திரும்பியபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. மேலும் கண்இமைக்கும் நொடியில் பஸ் சாலை தடுப்பு சுவரை இடித்து கொண்டு பள்ளத்துக்குள் பாய்ந்தது.
இந்த பஸ்சில் மொத்தம் 59 பேர் பயணித்த நிலையில் அவர் கூச்சலிட்டனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள், தீயணைப்பு வீரர்கள் என அனைவரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கயிறு கட்டி பேருந்தில் சிக்கியவர்களை மீட்டனர். அப்போது சம்பவ இடத்தில் 3 பேர் பலியானது தெரியவந்தது.
மேலும் 40க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 6 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை என்பது 9 ஆக அதிகரித்தது. மேலும் விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்துவிட்டு சொந்த ஊர் திரும்பியபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. மேலும் விபத்தில் முப்புடாதி (வயது 67), முருகேசன் (வயது 65), இளங்கோ (64), தேவிகலா (வயது 42), கௌசல்யா (வயது 29), செல்வன், நிதின் உள்பட 9 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது வருகி்றது.
இந்நிலையில் தான் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் ஓட்டுநரின் அஜாக்கிரதையே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு விபத்தில் 9 பேர் பலியான நிலையில், 43 பேர் படுகாயமடைந்துள்ளனர். 9 பேர் காயமின்றி தப்பினர் என கூறப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக சுற்றுலா பஸ் உரிமையாள், 2 ஓட்டுனர்கள், சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications