Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AI தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு ஏற்படாது! இயல்பு மட்டுமே மாறும்! பாரிஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

Subscribe to Oneindia Tamil

பாரிஸ்: 3 நாள் பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொழில் தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், உலகின் தென்பகுதி மக்களுக்கும் ஏஐ தொழில்நுட்ப பலன்கள் சென்று சேர வேண்டும். ஏஐ தொழில் நுட்பத்தால் வேலையிழப்பு ஏற்படாது. அதன் இயல்பு மட்டுமே மாறும். ஏஐ எதிர்காலம் நல்லது என்பதை உறுதிப்படுத்த இந்தியா தனது அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது என்று கூறினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2 நாள் செயற்கை நுண்ணறிவு உச்சி (ஏஐ) மாநாடு நேற்று தொடங்கியது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நடத்தும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் இமானுவேல் மேக்ரான் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடியும் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றார்.

PM Modi AI Paris

3 நாள் பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, பாரிசில் இன்று நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொழில் தொடர்பான உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

மிக குறைந்த செலவில் 1.4 பில்லியனுக்கும் அதிகமான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை இந்தியா வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. ஏஐ வளர்ச்சி இந்தியா தனது அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது. சுகாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதன் மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்ற ஏஐ உதவும்

ஏஐ தொழில் நுட்பம் இதுவரை இல்லாத வகையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை அனைவரும் எளிதில் அணுகும் வகையில் பரவலாக்க வேண்டும். புதுவை நிர்வாகத்தை பற்றி நாம் ஆழமாக சிந்தித்து வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் ஏஐ தொழில் நுட்பத்தை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

உலகின் தென்பகுதி மக்களுக்கும் ஏஐ தொழில்நுட்ப பலன்கள் சென்று சேர வேண்டும். ஏஐ தொழில் நுட்பத்தால் வேலையிழப்பு ஏற்படாது. அதன் இயல்பு மாறும். ஏஐ எதிர்காலம் நல்லது என்பதை உறுதிப்படுத்த இந்தியா தனது அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது. ஏஐ தொழில் நுட்பம் மூலம் சுகாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் புரட்சி ஏற்படுத்த முடியும். இவ்வாறு மோடி கூறினார்.

ஏஐ வளர்ச்சியில் அதிக உலக நிறுவனங்களை ஈடுபடுத்தவும், இந்தத் துறை அமெரிக்க-சீனப் போராக மாறுவதைத் தடுக்கவும் ஒரு முயற்சியாக பாரிசில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சீன துணை பிரதமர் சாங் குவோகிங் உள்ளிட்ட சுமார் 100 நாடுகளின் தலைவர்களும், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+