பீகாரில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர் படுகொலை- 6 இந்துத்துவா தீவிரவாதிகள் கைது
பாட்னா: பீகாரில் தேசிய கொடியை பிடித்தபடி குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட அமீர் ஹன்ஸ்லா (18) படுகொலை வழக்கில் இந்துத்துவா தீவிரவாதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகாரின் புல்வாரி ஷரீப் பகுதியில் டிசம்பர் 21-ல் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் 18 வயது இளைஞரான அமீர் ஹன்ஸ்லாவும் பங்கேற்றார். இதில் கையில் தேசிய கொடியை பிடித்தபடி அமீர் முழக்கங்களை எழுப்பினார்.

இப்பேரணியில் வன்முறை ஏற்பட்ட நிலையில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் அமீர் ஹன்ஸ்லாவும் பேரணியைவிட்டு வெளியேறி வீட்டுக்கு திரும்பினார். ஆனால் அமீர் ஹன்ஸ்லா வீட்டுக்கு திரும்பவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
இந்நிலையில் 10 நாட்களுக்குப் பின்னர் அமீர் ஹன்ஸ்லாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணைகளில் அமீர் ஹன்ஸ்லா அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளில் இந்து புத்ரா சங்காதன், இந்து சமாஜ் சங்காதன் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்து புத்ரா சங்காதன் உள்ளிட்ட 19 இந்துத்துவா தீவிரவாத அமைப்புகளை பீகார் போலீஸ் கண்காணித்து வந்தனர்.
அத்துடன் சமூக வலைதளங்களில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களில் வன்முறையில் ஈடுபட வேண்டும் என்று வீடியோ பதிவுகளை வெளியிட்ட 2 இந்துத்துவா தீவிரவாதிகளையும் பீகார் போலீசார் தேடி வருகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications