விவசாயிகளுடன் சென்ற படகு கங்கையில் கவிழ்ந்து விபத்து.. 2 பேரை காணவில்லை! தேடும் பணி தீவிரம்
பாட்னா: பீகாரில் விவசாயிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் இரண்டு பேரை காணவில்லை. எனவே அவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டிருக்கிறது.
பீகார் மாநிலத்தின் மானேர் மாவட்டத்தில் உள்ள மகாவீர் தோலா கிராமத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்திருக்கிறது. இந்த கிராமத்திற்கு வரவேண்டும் எனில் படகு மூலமாகத்தான் வர முடியும். எனவே தினமும் இங்குள்ள விவசாயிகள் படகு மூலம் ஆற்றை கடந்து காய்கறிகளை கொண்டு சென்று விற்பதுண்டு. அதேபோல இன்று காலையும் 10-12 விவசாயிகள் ஆற்றை கடந்திருக்கிறார்கள்.

அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்திருக்கிறது. இதில் 10 பேர் வரை நீந்தி ஆற்றை கடந்திருக்கிறார்கள். 2 பேர் மட்டும் காணவில்லை. எனவே இவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. மாநில பேரிடர் மீட்பு படையினர் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இந்த விபத்து குறித்து அவர்கள் கூறுகையில்,
"காலை 7-8 மணியளவில் இந்த விபத்து நடந்திருக்கிறது. படகில் காய்கறிகளை ஏற்றி சென்ற விவசாயிகள் இதில் சிக்கியிருக்கிறார்கள். விஷயம் கேள்விப்பட்டவுடன் நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டோம். 2 பேரை காணவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக மேலதிக விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
ஏற்கெனவே இதேபோன்ற படகு விபத்து சம்பவம் நடந்து சில நாட்களுக்குள் தற்போது மற்றொரு சம்பவம் நடந்திருக்கிறது. மே 9ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜீலம் நதிக்கரையில் 2 பேர் காணாமல் போயினர். இந்த படகில் மொத்தம் 9 பேர் பயணித்திருக்கின்றனர். இதில் 7 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 2 பேரை காணவில்லை.
கடந்த மாதம் இதேபோன்று கந்த்பால் பகுதியில் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் இரண்டு குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. 15 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்ததில் இந்த சோக சம்பவம் நடந்தது. இப்படியாக தொடர் விபத்து சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications