வேற இடமே இல்லையா.. சத்ருகன் சின்ஹா வீட்டு வழியாதான் அமித் ஷா பேரணி போகணுமா.. பாட்னாவில் பரபரப்பு
பாட்னாவில் சத்ருகன் சின்ஹா வீட்டு வழியாக பேரணியாக சென்று சீண்டி விட்டுள்ளார் அமித்ஷா
பாட்னா: பாஜக சும்மாவே இருக்காது போல. பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிடும் நடிகர் சத்ருகன் சின்ஹாவை விடாமல் சீண்டி வருகிறார்கள்.
இப்போது பாட்னாவில் உள்ள சத்ருகன் சின்ஹாவுக்குச் சொந்தமான வீடு அமைந்துள்ள பகுதியில் பாஜக தலைவர் அமித் ஷாவின் பேரணியை நடத்துகிறது பாஜக. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் சத்ருகன் சின்ஹா இதை வரவேற்றுள்ளார். கூடவே, தாராளமா வரட்டும். நல்ல மனதோடு வந்தால் டீ, பக்கோடா தருவோம் என்று நக்கலும் அடித்துள்ளார்.
எக்கோ பிரெண்ட்லி வாகன எஞ்சின் கண்டுபிடிப்பு.. தமிழர் அசத்தல் சாதனை.. கவுரவப்படுத்திய ஜப்பான்
பாஜக தலைமை
வாஜ்பாயியின் தீவிர அபிமானிதான் சத்ருகன் சின்ஹா. ஆனால் மோடிக்கு கடும் எதிர்ப்பானவர். மோடியின் தவறுகளை, மோடி அரசின் குளறுபடிகளை கடுமையாக பகிரங்கமாக கண்டித்து வந்தவர். இதனாலேயே அவரை பாஜக தலைமைக்குப் பிடிக்காமல் போயிற்று.
பாட்னாசாஹிப்
தொடர்ந்து கடுமையாக போட்டுத் தாக்கி வந்த சின்ஹா கடைசியில் காங்கிரஸில் இணைந்தார். தற்போது பாட்னாசாஹிப் தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு 19ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
அமித்ஷா பேரணி
இந்த நிலையில்தான் அமித்ஷாவின் பேரணி , பாட்னாவின் கதம் குவான் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில்தான் சத்ருகன் சின்ஹாவுக்குச் சொந்தமான வீடு உள்ளது. குறுகிய தெருக்களைக் கொண்ட பகுதி இது. மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதியும் கூட. இந்தப் பகுதிகள் வழியாகத்தான் அமித் ஷா பேரணியாக போகப் போகிறார். கடைசியில் காந்தி மைதானில் போய் பேரணி முடியும்.
விபரீதம்
சத்ருகன் சின்ஹா வீட்டு வழியாக பாஜக பேரணிக்கு ஏற்பாடு செய்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வேண்டும் என்றே செய்கிறது பாஜக. இதனால் சத்ருகன் சின்ஹாவை கடுப்படிக்க வேண்டும் என்பதே அதன் திட்டம். இது தேவையில்லாதது, விபரீதமானது என்று காங்கிரஸ் கண்டித்துள்ளது.
பக்கோடா
சத்ருகன் சின்ஹா இதற்கெல்லாம் பயப்படுகிறவரா இல்லையே. தாராளமாக பேரணி போகட்டும். முடிந்தால் டீ, பக்கோடா கூட தருகிறோம். ஆனால் வம்பிழுக்க நினைத்தால் தக்க பதிலடியை பீகார் குடும்பம் அமித் ஷாவுக்குக் கொடுக்கும் என்று எச்சரித்துள்ளார்.