பீகாரில் 3.44% வாக்குகளை பெற்ற பிரசாந்த் கிஷோர்! நோட்டாவுடன் போட்டிபோட்ட ஜன்சுராஜ் கட்சி நிர்வாகிகள்
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி சுமார் 3.44 சதவிகித வாக்குகளை பெற்றிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. பீகாரில் போட்டியிட்ட 238 தொகுதிகளில் ஏராளமான வேட்பாளர்கள் 3வது இடத்தை பிடித்திருந்தாலும், சில தொகுதிகளில் நோட்டாவுடன் போட்டி போட வேண்டிய நிலையில் இருந்துள்ளனர்.
பீகார் சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதியாகிவிட்ட நிலையில், 10வது முறையாக நிதிஷ் குமார் முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை என்டிஏ கூட்டணி 204 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.

அதேபோல் பீகார் தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சியின் செயல்பாடுகள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ஜன்சுராஜ் கட்சிக்கு 0-2 தொகுதிகள் வரை மட்டுமே வெல்ல வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதற்கேற்ப வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட போது ஜன்சுராஜ் கட்சி 2 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. ஆனால் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, முதல் 3 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பின், அந்த முன்னிலையிலும் முடிவுக்கு வந்தது. இதன்பின் ஜன்சுராஜ் கட்சியின் எந்த வேட்பாளர்களும் முன்னிலைக்கு வரவே இல்லை.
ஜன்சுராஜ் கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், கடைசி நேரத்தில் பிரசாந்த் கிஷோர் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்தது அந்தக் கட்சிக்கு பின்னடைவாக மாறியது. கட்சியின் தலைவரே தோல்விக்கு பயந்து தேர்தலில் போட்டியிடாமல் விலகினால் எப்படி என்று அக்கட்சியின் ஆதரவாளர்களே முணுமுணுக்க தொடங்கினர்.
இந்த நிலையில் பீகார் தேர்தலில் ஜன்சுராஜ் கட்சியின் வேட்பாளர்கள் பலரும் 3வது இடத்தை பிடித்துள்ளனர். ஆனால் சில தொகுதிகளில் நோட்டாவுடன் போட்டி போட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பிரசாந்த் கிஷோரின் கட்சிக்கு சுமார் 3.44 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன் மூலமாக பீகார் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற 7வது கட்சி என்ற பெருமையை பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி பெற்றுள்ளது. இதையடுத்து பிரசாந்த் கிஷோர் மீண்டும் வியூக வகுப்பாளர் பணிக்கே செல்வாரா அல்லது அரசியல் நடவடிக்கைகளை தொடர்வாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications