பீகாரில் நிதிஷ்குமார் எதிர்ப்பு அலை... அடித்து சொல்லும் எக்ஸிட் போல் முடிவுகள்!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் களத்தில் 15 ஆண்டுகால ஆட்சி நடத்திய முதல்வர் நிதிஷ்குமாருக்கு எதிரான அலை வீசுவதாகவே தேர்தலுக்குப் பிந்தைய எக்ஸிட் போல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
Recommended Video
பீகாரில் பாஜகவுடனும் ஆர்ஜேடி-காங்கிரஸுடனும் மாறி மாறி கூட்டணி வைத்து 15 ஆண்டுகால ஆட்சியை நகர்த்தியவர் முதல்வர் நிதிஷ்குமார். தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறாத போதும் கூட்டணி கட்சிகள் ஆதரவில் கூட்டணி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருந்தார் நிதிஷ்குமார்.

பீகார் தேர்தல் களம்
பீகாரில் வேலைவாய்ப்பின்மை மிகப் பெரிய பிரச்சனையாக தலைவிரித்தாடுகிறது. கொரோனா லாக்டவுன் காலத்தில், பிற மாநிலங்களில் பீகாரை சேர்ந்த இடம்பெயர் தொழிலாளர்கள் பட்ட துயரம் சொல்லி மாளாதது. இவை அனைத்தும் பீகார் தேர்தல் களத்தில் எதிரொலித்தன.

பீகார் தேர்தல் களம்
பீகாரில் வேலைவாய்ப்பின்மை மிகப் பெரிய பிரச்சனையாக தலைவிரித்தாடுகிறது. கொரோனா லாக்டவுன் காலத்தில், பிற மாநிலங்களில் பீகாரை சேர்ந்த இடம்பெயர் தொழிலாளர்கள் பட்ட துயரம் சொல்லி மாளாதது. இவை அனைத்தும் பீகார் தேர்தல் களத்தில் எதிரொலித்தன.

சீனியர்கள், ஜூனியர்கள்
பீகாரில் முதியவர்களுக்கும் இளையோருக்கும் போட்டி என்கிற வகையில் நிதிஷ்குமாருக்கு போட்டியாக ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இன்னொரு பக்கம் பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வான் முழு வீச்சாக நிதிஷ்குமாரை எதிர்த்து பிரசாரம் செய்தார்.

சீனியர்கள், ஜூனியர்கள்
பீகாரில் முதியவர்களுக்கும் இளையோருக்கும் போட்டி என்கிற வகையில் நிதிஷ்குமாருக்கு போட்டியாக ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இன்னொரு பக்கம் பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வான் முழு வீச்சாக நிதிஷ்குமாரை எதிர்த்து பிரசாரம் செய்தார்.

எக்ஸிட் போல் முடிவுகள்
இவை அனைத்துமே நிதிஷ்குமார் எதிர்ப்பு அலையை களத்தில் உருவாக்கி இருப்பதாக இதுவரை வெளியான எக்ஸிட் போல் முடிவுகள் தெளிவாக சொல்கின்றன. சிவோட்டர் டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் முடிவுகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸிட் போல் முடிவுகள்
இவை அனைத்துமே நிதிஷ்குமார் எதிர்ப்பு அலையை களத்தில் உருவாக்கி இருப்பதாக இதுவரை வெளியான எக்ஸிட் போல் முடிவுகள் தெளிவாக சொல்கின்றன. சிவோட்டர் டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் முடிவுகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் நிதிஷ் எதிர்ப்பு அலை
ஆனால் ரிபப்ளிக் டிவி கருத்து கணிப்பில் ஆர்ஜேடி-காங். அணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்கிறது. பெரும்பாலான கருத்து கணிப்புகள் நிதிஷ்குமாருக்கு எதிர்ப்பு அலை இருப்பதை வெளிப்படுத்துகின்றன.

பீகாரில் நிதிஷ் எதிர்ப்பு அலை
ஆனால் ரிபப்ளிக் டிவி கருத்து கணிப்பில் ஆர்ஜேடி-காங். அணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்கிறது. பெரும்பாலான கருத்து கணிப்புகள் நிதிஷ்குமாருக்கு எதிர்ப்பு அலை இருப்பதை வெளிப்படுத்துகின்றன.












Click it and Unblock the Notifications