பாஜக பக்கம் இனி வர முடியாது.. கதவுகளை அடைச்சிட்டோம்.. நிதிஷ் குமாரை விட்டு விளாசிய அமித்ஷா
பாட்னா: பீகாரில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கலந்துகொண்டார். அப்போது பாஜக கூட்டணியில் இருந்து விலகி ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து ஆட்சி நடத்தி வரும் முதல்வர் நிதிஷ் குமார் இனி ஒருபோதும் பாஜக கூட்டணிக்கு வர முடியாது. அவருக்கான கதவுகளானது அடைக்கப்பட்டு விட்டது என்று பேசினார்.
மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா இன்று பீகார் மாநிலம் சென்றார்.
அங்குள்ள நவாடா மாவட்டத்தில் ஹிசுவா பகுதியில் பாஜகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமித்ஷா, பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

நிதிஷ் குமாரை விமர்சித்த அமித்ஷா
மத்தியில் ஆளும் பாஜக அரசின் சாதனைகள் குறித்து பேசிய அமித்ஷா, பாஜக கூட்டணியில் இருந்து விலகி ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து ஆட்சி நடத்தி வரும் முதல்வர் நிதிஷ் குமாரையும் கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக அமித்ஷா கூறியதாவது:- நிதிஷ்குமார் இனி ஒருபோதும் பாஜக கூட்டணிக்கு வர முடியாது. அவருக்கான கதவுகளானது அடைக்கப்பட்டு விட்டது.

ஒருபோதும் பலிக்காது
பிரதமராகும் நிதிஷ் குமாரின் கனவு ஒரு போதும் பலிக்கப் போவது இல்லை. ஏனெனில் அந்த பதவி காலியாக இல்லை. ஒருவருக்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இன்னொருவருக்கு (தேஜஸ்வி யாதவ்) முதல்வராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. லாலு பிரசாத் யாதவிற்கும் நிதிஷ் குமாருக்கும் முழு வேறுபாடுகள் உள்ளன. பீகார் மக்கள் 40 மக்களவை தொகுதிகளிலும் பிரதமர் மோடிக்காக வாக்கு அளிப்பார்கள்.

வேரோடு வீழ்த்துவோம்
பீகாரில் காட்டாட்சி நடத்தி வந்த லாலு பிரசாத் யாதவுடன் அதிகாரத்திற்காக நிதிஷ் குமார் கை கோர்த்துள்ளார். பச்சோந்தி, துரோகி, பாம்பு என மிகக் கடுமையான வார்த்தைகளால் நிதிஷ் குமாரை தேஜஸ்வி யாதவ் முன்பு சாடியிருந்தார். ஆனால், அதிகாரத்திற்காக இதையெல்லாம் நிதிஷ்குமார் மறந்துவிட்டார். நாங்கள் மக்களிடம் சென்று மெகா கூட்டணி அரசை வேரோடு வீழ்த்துவோம்.

நிதிஷ் குமாருடன் பாஜக கைகோர்க்காது
பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக பிரதமர் ஆக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் தீர்மானித்து விட்டனர். நிதிஷ் குமாரும் லாலு பிரசாத் யாதவும் திருப்தி படுத்தும் அரசியலில் ஈடுபடுகின்றனர். இது தீவிரவாதம் வளர்வதற்கு உதவுகிறது. இனவாதம் என்ற விஷத்தை பரப்பும் நிதிஷ் குமாருடன் ஒருபோதும் பாஜக கைகோர்க்காது. ஐக்கிய ஜனதா தளம், ரஷ்ட்ரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ராமர் கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவித்தன. இவ்வாறு அவர் பேசினார்.
-
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
வரலாற்றில் முதல் முறை.. நிதிஷ் குமாருக்கு பதில் பீகார் முதல்வரானார் பாஜகவின் சாம்ராட் சவுத்ரி.. யார் இவர்? சுவாரசியம் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன்












Click it and Unblock the Notifications