பரபரப்பு.. ராம்விலாஸ் பாஸ்வான் எப்படி இறந்தார்.. விசாரிக்ககோரும் மஞ்சி.. சிராக் பாஸ்வான் கொந்தளிப்பு
ராம் விலாஸ் பாஸ்வான் எப்படி இறந்தார் என்று விசாரணை கோருகிறது தேசிய ஜனநாயக கூட்டணி
பாட்னா: முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என முன்னாள் முதல்வரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒருவருமான ஜித்தன் ராம் மஞ்சி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதால் பீகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்த ராம் விலாஸ் பாஸ்வான் அக்டோபர் 8ம் தேதி மரணமடைந்தார்.. அவரது லோக் ஜன சக்தி கட்சி தற்போது பீகார் சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. மகன் சிராக் பாஸ்வான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மறுபக்கம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் ஆகியவை கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.. சிராக்குடன் பாஜக ரகசிய உறவு வைத்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. நிதீஷ் குமாரை காலி செய்யவே சிராக்கை தனித்து போட்டியிட வைத்துள்ளது பாஜக என்றும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

ஜித்தன் ராம் மஞ்சி
இந்த நிலையில், சிராக் பாஸ்வானை குறி வைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களில் ஒருவரான ஜித்தன் ராம் மஞ்சி இறங்கியுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு மஞ்சி எழுதியுள்ள கடிதத்தில், பாஸ்வான் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். சிராக் பாஸ்வானின் நடத்தை மீது சந்தேகம் உள்ளது. ராம் விலாஸ் பாஸ்வான் போட்டோ முன்பு அவர் ஒத்திகை பார்ப்பது போல வெளியான வீடியோ பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

போட்டோ ஷூட்
நாடே பாஸ்வான் மரணம் தொடர்பாக துக்கத்தில் இருந்தபோது அப்பாவின் போட்டோவுக்கு முன்பு ரிகர்சல் பார்த்துள்ளார் சிராக் பாஸ்வான்... எனவே இது விசாரிக்கப்பட வேண்டும்.. யாருடைய உத்தரவின் பேரில் பாஸ்வான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்? யார் மருத்துவ அறிக்கைகளை வெளியிட்டது? யாருடைய உத்தரவின் பேரில் ராம் விலாஸ் பாஸ்வானை 3 பேர் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டனர்? என்பது தெளிவாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் மஞ்சி.

விளக்கம்
தற்போது இது குறித்து கொதிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சிராக் பாஸ்வான்.. அவர் சொல்லும்போது, எனது அப்பா ஆஸ்பத்திரியில் இருந்தபோது ஏன் மஞ்சி அவரைப் பார்க்க வரவில்லை. ஏன் அக்கறை காட்டவில்லை. இப்போது இறந்த பிறகு சிறுபிள்ளைத்தனமாக பேசுவது ஏன். யாருமே அவர் உயிருடன் இருந்தபோது வந்து பார்க்கவில்லையே.. இப்போது ஏன் அக்கறை காட்டுகிறார்கள்.

பரபரப்பு
என்னுடைய அப்பா சீரியஸாக உள்ளது குறித்து மஞ்சியிடம் நான் போனில் சொன்னேன்.. அப்போதும் கூட அவர் வந்து பார்க்கவில்லை.. இப்போது இப்படி பேசுகிறார்... அவர்கள் வெட்கப்பட வேண்டும் என்றார் சிராக் பாஸ்வான்... நாளை பீகாரில் அடுத்த கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது பெரும் பரபரப்பை அங்கு ஏற்டுத்தி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications