யாரை மீட்பது? பரிதவிக்கும் மாணவர்களையா? பல லட்சம் தொழிலாளர்களையா? சர்ச்சையான நிதிஷ்குமாரின் வியூகம்
பாட்னா: கொரோனா லாக்டவுன் இந்திய அரசியல் வரலாற்றிலும் விசித்திரங்களையும் விளையாட்டுகளையும் அரங்கேற்றி வருகிறது. இதன்பிடியில் சிக்கியிருப்பதுதான் பீகார் அரசியல்.
கொரோனா லாக்டவுன் என்பது பல மாநிலங்களுக்கு பல்வேறு வகைகளில் பெரும் நெருக்கடிகளை கொடுத்திருக்கிறது. குறிப்பாக பிற மாநிலங்களில் சிக்கியிருக்கும் தங்களது மாநிலத்தவரை மீட்பதில்தான் பெரும் சிக்கலை மாநிலங்கள் எதிர்கொள்கின்றன.
லாக்டவுன் தொடக்கத்தில் அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களை தொடர்பு கொண்டு தங்களது மாநில தொழிலாளர்களை பாதுக்காக்க முதல்வர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று அந்தந்த மாநில முதல்வர்களும் உதவி செய்தனர்.

நடை பயணம்
லாக்டவுன் மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில் பிற மாநிலங்களில் தவித்த கூலித் தொழிலாளர்கள் வெறுப்படைந்து போயினர். இதனால் எப்படியாவது சொந்த ஊருக்கு சென்றுவிடுவதில் முனைப்புடன் நடக்கவும் தொடங்கினர். அப்படி பாதி வழியில் வந்து சிக்கியவர்களும் மரணித்தவர்களும் உண்டு.

மாநிலங்களின் மீட்பு நடவடிக்கைகள்
இந்நிலையில் ராஜஸ்தானின் கோட்டா உள்ளிட்ட சில மாநிலங்களில் தவிக்கும் மாணவர்கள் உள்ளிட்டோரை மீட்பதி வட இந்திய மாநிலங்கள் முனைப்பு காட்டின. சிறப்பு பேருந்துகள் மூலம் இந்த மாணவர்களை மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மீட்டிருக்கின்றன.

பீகார் மீது விமர்சனம்
இதனால் பீகார் மாநில அரசு கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகி இருக்கிறது. பீகாரில் ஒருதரப்பினர் ராஜஸ்தானின் கோட்டாவில் தவிக்கும் மாணவர்களை ஏன் மீட்கவில்லை என்று கேள்வி எழுப்புகிறது. இன்னொரு பக்கம், பிற மாநிலங்களில் தவிக்கும் பீகாரின் 25 லட்சம் கூலித் தொழிலாளர்களை எப்போது மீட்டு வருவீர்கள்? என்கிற கேள்வி முன்வைக்கப்படுகிறது. இது பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு கடும் நெருக்கடியை தந்துள்ளது.

நிதிஷின் தேர்தல் கணக்கு
நிதிஷ்குமாரைப் பொறுத்தவரையில் ராஜஸ்தானின் கோட்டாவில் படித்து வரும் மாணவர்கள் நல்ல பொருளாதார பின்புலம் கொண்டவர்கள்; அவர்களை விட பிற மாநிலங்களில் தவிக்கும் தொழிலாளர்களை மீட்பதில் முன்னுரிமை காட்ட நினைக்கிறார். ஆனால் இது சாத்தியமில்லை என்பதையும் உணர்ந்திருக்கிறார். இத்தனை லட்சம் கூலித் தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு முயன்றாலே ஏழைகளின் பாதுகாவலன் என்கிற மிகப் பெரிய இமேஜ் கிடைக்கும். இது தேர்தல் களத்தில் கை கொடுக்கும் என்பது நிதிஷ்குமாரின் கணக்கு. இதனால் மத்திய அரசு மீது தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார் நிதிஷ். ஆனால் எதிர்க்கட்சிகளோ இந்த விவகாரத்தை அவ்வளவு எளிதாக விட்டுவிடாமல் நிதிஷ்குமாருக்கு நெருக்கடி தந்து கொண்டிருக்கின்றன.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications