யாரை மீட்பது? பரிதவிக்கும் மாணவர்களையா? பல லட்சம் தொழிலாளர்களையா? சர்ச்சையான நிதிஷ்குமாரின் வியூகம்
பாட்னா: கொரோனா லாக்டவுன் இந்திய அரசியல் வரலாற்றிலும் விசித்திரங்களையும் விளையாட்டுகளையும் அரங்கேற்றி வருகிறது. இதன்பிடியில் சிக்கியிருப்பதுதான் பீகார் அரசியல்.
கொரோனா லாக்டவுன் என்பது பல மாநிலங்களுக்கு பல்வேறு வகைகளில் பெரும் நெருக்கடிகளை கொடுத்திருக்கிறது. குறிப்பாக பிற மாநிலங்களில் சிக்கியிருக்கும் தங்களது மாநிலத்தவரை மீட்பதில்தான் பெரும் சிக்கலை மாநிலங்கள் எதிர்கொள்கின்றன.
லாக்டவுன் தொடக்கத்தில் அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களை தொடர்பு கொண்டு தங்களது மாநில தொழிலாளர்களை பாதுக்காக்க முதல்வர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று அந்தந்த மாநில முதல்வர்களும் உதவி செய்தனர்.

நடை பயணம்
லாக்டவுன் மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில் பிற மாநிலங்களில் தவித்த கூலித் தொழிலாளர்கள் வெறுப்படைந்து போயினர். இதனால் எப்படியாவது சொந்த ஊருக்கு சென்றுவிடுவதில் முனைப்புடன் நடக்கவும் தொடங்கினர். அப்படி பாதி வழியில் வந்து சிக்கியவர்களும் மரணித்தவர்களும் உண்டு.

மாநிலங்களின் மீட்பு நடவடிக்கைகள்
இந்நிலையில் ராஜஸ்தானின் கோட்டா உள்ளிட்ட சில மாநிலங்களில் தவிக்கும் மாணவர்கள் உள்ளிட்டோரை மீட்பதி வட இந்திய மாநிலங்கள் முனைப்பு காட்டின. சிறப்பு பேருந்துகள் மூலம் இந்த மாணவர்களை மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மீட்டிருக்கின்றன.

பீகார் மீது விமர்சனம்
இதனால் பீகார் மாநில அரசு கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகி இருக்கிறது. பீகாரில் ஒருதரப்பினர் ராஜஸ்தானின் கோட்டாவில் தவிக்கும் மாணவர்களை ஏன் மீட்கவில்லை என்று கேள்வி எழுப்புகிறது. இன்னொரு பக்கம், பிற மாநிலங்களில் தவிக்கும் பீகாரின் 25 லட்சம் கூலித் தொழிலாளர்களை எப்போது மீட்டு வருவீர்கள்? என்கிற கேள்வி முன்வைக்கப்படுகிறது. இது பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு கடும் நெருக்கடியை தந்துள்ளது.

நிதிஷின் தேர்தல் கணக்கு
நிதிஷ்குமாரைப் பொறுத்தவரையில் ராஜஸ்தானின் கோட்டாவில் படித்து வரும் மாணவர்கள் நல்ல பொருளாதார பின்புலம் கொண்டவர்கள்; அவர்களை விட பிற மாநிலங்களில் தவிக்கும் தொழிலாளர்களை மீட்பதில் முன்னுரிமை காட்ட நினைக்கிறார். ஆனால் இது சாத்தியமில்லை என்பதையும் உணர்ந்திருக்கிறார். இத்தனை லட்சம் கூலித் தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு முயன்றாலே ஏழைகளின் பாதுகாவலன் என்கிற மிகப் பெரிய இமேஜ் கிடைக்கும். இது தேர்தல் களத்தில் கை கொடுக்கும் என்பது நிதிஷ்குமாரின் கணக்கு. இதனால் மத்திய அரசு மீது தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார் நிதிஷ். ஆனால் எதிர்க்கட்சிகளோ இந்த விவகாரத்தை அவ்வளவு எளிதாக விட்டுவிடாமல் நிதிஷ்குமாருக்கு நெருக்கடி தந்து கொண்டிருக்கின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications