பீகார் தேர்தல்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் நிதிஷ்குமார்! யார் யாருக்கு வாய்ப்பு?
பாட்னா: பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஐக்கிய ஜனதா தளம் கட்சி வெளியிட்டிருக்கிறது. 57 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை நிதிஷ்குமார் வெளியிட்டிருக்கிறார். இந்த பட்டியலில் 4 பெண்களின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன.
இப்பட்டியல் படி, மகாநார் தொகுதியில் கட்சியின் மாநிலத் தலைவர் உமேஷ் குஷ்வாஹா, நாளந்தாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்ரவண் குமார், மற்றும் போரே (தனி) தொகுதிக்கு சுனில் குமார் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் பல முக்கிய வேட்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக, பாரதிய ஜனதா கட்சி தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. சட்டமன்றத் தேர்தலுக்கான 71 வேட்பாளர்களை கொண்ட பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது. சீவானுவில் மங்கள் பாண்டே, கடிஹாரில் தர்கிஷோர் பிரசாத், தானாபூரில் ராம்கிரிபால் யாதவ், பாங்கிப்பூரில் நிதின் நவீன், பெட்டியாவில் ரேணு தேவி, கயா நகரத்தில் பிரேம் குமார், ஜாமுய்வில் ஷிரேயாசி சிங், லட்சுமணசாய் தொகுதியில் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா, தாராபூர் தொகுதியில் துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரியும் போட்டியிடுவார்கள் என்று பாஜக மத்திய தேர்தல் குழு அறிவித்திருந்தது.
தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன சுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் திங்கட்கிழமை தனது கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்திருந்தார். இதில் 65 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.












Click it and Unblock the Notifications