சிறுவர்களின் வங்கி கணக்கில் ரூ,960 கோடி டெபாசிட்.. உற்சாகத்தில் பெற்றோர்.. திகைப்பில் வங்கி அதிகாரிகள்
பாட்னா : பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் என்ற மாவட்டத்தில் வசிக்கும் இரண்டு சிறுவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் வங்கி அதிகாரிகள், கணிணியில் 960 கோடி ரூபாய் இருப்பு இருப்பதாக காட்டுவது எப்படி என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
அண்மையில் இதேபோன்று பீகாரின் ககாரியா மாவட்டத்தில் உள்ள பக்தியார்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் தாஸ் என்பவரது வங்கி கணக்கிற்கு ரூ. 5லட்சம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. அந்த பணத்தை அவர் உடனடியாக எடுத்து செலவு செய்துவிட்டார்.
அந்தப் பணத்தைத் திருப்பி அனுப்ப வங்கி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பிய நிலலையில் பணத்தை திருப்பி செலுத்த அவர் முன்வரவில்லை. இதையடுத்து, வங்கி நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. புகாரின் பேரில் ரஞ்சித் தாஸை போலீசார் கைது செய்தனர்.

5 லட்சம்
அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், "பிரதமர் மோடி ரூ.15 லட்சம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தார். அதில் முதல் தவணையாக ரூ. 5 லட்சம் டெபாசிட் செய்தார் என நினைத்து எடுத்துச் செலவு செய்தேன்" என்று கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் உண்மையை விளக்கி பணத்தை திரும்ப வாங்க முயற்சி செய்து வருகிறார்கள்.

சிறுவர்கள் கணக்கு
இந்த சூழலில் தான் பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் என்னும் மாவட்டத்தில் வசிக்கும் இரண்டு சிறுவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கதிஹார் மாவட்டம், பாஸ்தியா என்ற கிராமத்தைச் சேர்ந்த குருச்சந்திர விஸ்வாஸ், ஆசித் குமார் ஆகிய இரண்டு சிறுவனர்களுக்கு பள்ளியின் சார்பில் கிராம வங்கியில் உருவாக்கிக் கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்கில் திடீரென நேற்று முன்தினம் இரவு ரூ.960 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ள்து.

செல்போனில் எஸ்எம்எஸ்
வங்கிக் கணக்கில் ரூ.960 கோடி டெபாசிட் ஆனது குறித்து செல்போனில் வந்த தகவலையடுத்து, இரு சிறுவர்களும் தங்கள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்கள்.. இதைபார்த்து திகைத்துப்போன பெற்றோர் ஏடிஎம் சென்று வங்கியின் கணக்கு குறித்து ஆய்வு செய்திருக்கிறார்கள்.

பெற்றோர் தகவல்
அப்போது, இதில் ஆசித் குமார் கணக்கில் ரூ.60 கோடியும், குருச்சந்திர விஸ்காஸ் கணக்கில் ரூ.900 கோடியும் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். இதையடுத்து, சிறுவர்களின் பெற்றோர் உடனடியாக வங்கிக்குச் சென்று இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்கள். வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து ஆய்வு செய்தபோது, கணக்கில் குறைந்தபட்ச பணம் மட்டுமே இருந்தது, ஆனால், கணினியின் கணக்கில் ரூ.900 கோடி காட்டியது கண்டு குழம்பி போயினர்.

கணக்கில் குறைவான பணம்
வங்கியின் கணினிச் செயல்பாட்டு முறையில் சில கோளாறுகள் நடந்திருக்கலாம் என வங்கியின் மேலாளர் கூறினார். சிறுவர்களின் கணக்கில் குறைவான பணம் இருக்கிறது. ஆனால், கணினியின் கணக்கில் ரூ.960 கோடி காட்டுகிறது என்று வங்கி மேலாளர் விளக்கம் அளித்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications