பெரம்பலூர் கலெக்டர் ஆபீசில் திடீரென பிச்சை எடுத்த முத்தமிழ்ச்செல்வி.. ஆடிப்போன அதிகாரிகள்
பெரம்பலூர்: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது பலரும் தங்கள் குறைகள் குறித்து துறை வாரியாக சென்று புகார் அளித்தனர். கலெக்டர் ஆபிஸில் அளிக்கப்படும் புகார்களை அந்தந்த துறை அதிகாரிகள் விசாரணையும் நடத்தினார்கள். அப்போது புதிய ரேஷன் அட்டை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பிச்சை எடுத்த முத்தமிழ்ச்செல்வி என்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகங்களில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்பார்கள். இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் நேரடியாக கலெக்டரையும் சந்தித்து மனு அளிக்கலாம். அவர் எந்த துறை சம்பந்தப்பட்டதோ அந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக விசாரிக்குமாறு உத்தரவிடுவார். அதேநேரம் சில நேரங்களில் நேரடியாக அதிகாரிகளே மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பார்கள்.

இதேபோல் விவசாயிகள் குறைதீர் கூட்டமும் நடைபெறும். அப்போது விவசாயிகள் தங்களது குறைகளை கூறி நிவாரணம் பெறலாம். அதேபோல் புதிய ரேஷன் கார்டு, மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவி தொகை, பட்டா பிரச்சனை, பத்திரம் பிரச்சனை, தெருவிளக்கு, நூலகம், சாலை வசதிகள்,ஆக்கிரமிப்புகள் அகற்றம், காவல் நிலையங்களில் பிரச்சனை, வருவாய் துறையில் பிரச்சனை என எல்லா பிரச்சனைகளுக்கும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். கோரிக்கை வைக்கலாம். இது பொதுவான நடைமுறை.
அந்த வகையில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் பெண் ஒருவர், லஞ்சம் கொடுக்க பிச்சை போடுமாறு கூறி, கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுத்துக் கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அந்த பெண், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா, அகரம்சீகூர் பார்டர் அரியலூர் மெயின்ரோட்டை சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி (வயது 30) என்பது விசாரணையில் தெரியவந்தது.
முத்தமிழ்ச்செல்வி தனக்கு புதிதாக ரேஷன் அட்டை பெறுவதற்கு கடந்த டிசம்பர் மாதம் விண்ணப்பித்திருக்கிறார் ஆனால் அந்த விண்ணப்பம் கடந்த ஜனவரி மாதம் நிராகரிக்கப்பட்டதாக கூறி செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்து அவர் மீண்டும் விண்ணப்பித்துள்ளார். இதற்கிடையே புதிய ரேஷன் அட்டை தொடர்பாக அந்த ரேஷன் கடை விற்பனையாளர், முத்தமிழ்ச்செல்வியுடன் செல்போனில் பேசியபோது லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் முத்தமிழ்ச்செல்வி அந்த செல்போன் ஆடியோவை வைத்துக்கொண்டு புதிய ரேஷன் அட்டை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.இந்த சம்பவத்தால் பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸில் பரபரப்பு ஏற்பட்டது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications