கையில் தாமரை துண்டு பிரசுரம்! டக்குனு பாஜகவிற்கு பிரச்சாரம் செய்த விஜயபாஸ்கர்! இதென்ன புது குழப்பம்?
புதுக்கோட்டை: அதிமுக மூத்த தலைவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பாஜக சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறிவிட்டது. கேட்ட இடங்களை அதிமுக கொடுக்கவில்லை என்பதற்காக பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
ஆனால் களத்தில் பாஜக - அதிமுக இடையே பெரிய மோதல் இல்லை. பாஜக இதுவரை அதிமுகவை தாக்கி எங்கும் பிரச்சாரம் செய்யவில்லை.

அண்ணாமலை
முன்னதாக கூட்டணி முறிவு குறித்து பேட்டி அளித்த பாஜக தலைவர் அண்ணாமலை கூட, அதிமுக தலைவர்களை நாங்கள் மதிக்கிறோம். எங்களுக்கு தேவையான இடங்கள் கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளோம். மற்றபடி வேறு மோதல் எதுவும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் கூட்டணியோடு போட்டியிடுவோம் என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.

பிரச்சாரம்
ஆனால் கள அளவில் கீழ் மட்ட நிர்வாகிகள் பலர் இப்போதும் மோதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதிமுக - பாஜக நிர்வாகிகள் இடையே உள்ளூர் அளவில் கடுமையான போட்டி மற்றும் மோதல் நிலவி வருகிறது. அதிமுக தலைமையை பாஜக விமர்சனம் செய்துவிட்டது. இதனால் பாஜக வெற்றிபெற கூடாது என்று உள்ளூர் அளவில் பாஜகவிற்கு எதிராக அதிமுக நிர்வாகிகள் பலர் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த நிலையில்தான் அதிமுக மூத்த தலைவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பாஜக சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

என்ன நடந்தது
நேற்று புதுக்கோட்டையில் கீரமங்கலம் பேரூராட்சி 10வது மற்றும் 11வது வார்டில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்சாரம் செய்தார். அப்போது அங்கு பாஜக, அதிமுக கொடிகள் ஒன்றாக ஏற்றப்பட்டு இருந்தன. இங்கு 10வது வார்டில் சுமதி, 11வது வார்டில் ராஜாமணி ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்கள். இவர்களின் துண்டு பிரசுரம், கட் அவுட் அனைத்திலும் பாஜக கொடி மட்டுமின்றி அதிமுக கொடியும் சேர்ந்து இடம்பெற்று இருந்தது.

அதிமுக கொடி
இந்த நிலையில்தான் இவர்களை ஆதரித்து ஜீப் ஒன்றில் நின்றபடி விஜயபாஸ்கர் பிரச்சாரம் செய்தார். பாஜகவின் துண்டு பிரசுரம் விஜயபாஸ்கர் கையில் இடம்பெற்று இருந்தது. அதிமுக - பாஜக இடையே கூட்டணி இல்லாத நிலையில் இப்படி விஜயபாஸ்கர் பிரச்சாரம் செய்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதிமுக உள்ளூர் நிர்வாகிகளோ, அதிமுக- பாஜக இடையே கீரமங்கலம் பேரூராட்சியில் மட்டும் கூட்டணி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உடன்படிக்கை
உள்ளூர் அளவில் இங்கு மட்டும் கூட்டணி உள்ளது. இங்கு 15 வார்டில் அதிமுக 9, பாஜக 2 இடங்களை பிரித்து போட்டியிடுகிறது. வேறு இடங்களில் பாஜக நிறுத்தப்படவில்லை. பாஜகவிற்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகளும், அதிமுகவிற்கு ஆதர்வாக் பாஜக நிர்வாகிகளும் வாக்கு கேட்டு வருகிறார்கள். உள்ளூர் அளவில் புரிதல் காரணமாக கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால் பாஜகவிற்காக விஜயபாஸ்கர் வாக்கு சேகரித்ததில் தவறு இல்லை என்று அதிமுக உள்ளூர் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications