விநாயகர் சதுர்த்தி! மின் கட்டண உயர்விலிருந்து 2026ல் காப்பாற்றப்படுவீர்கள்! புயலை கிளப்பிய காங்கிரஸ்
புதுவை: புதுவை மின் உயர்விலிருந்து 2026 ஆம் ஆண்டு காப்பாற்றப்படுவீர்கள் என அறிவிப்புடன் விநாயகர் சதுர்த்தி விழாவை காங்கிரஸ் கட்சியினர் நூதனமாக முறையில் கொண்டாடியுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவையில் நேற்றைய தினம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. முத்தியால்பேட்டை பகுதியில் பெரிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து காங்கிரஸ் ஆதரவாளர்கள் சார்பில் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் நூதனமாக விநாயகர் அருள் பாவிக்கும் வகையில் மின் கட்டண உயர்வை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. அதாவது, "பக்தர்களே கவலை வேண்டாம்- மின்சார கட்டண உயர்வில் இருந்தும் மின்துறை தனியார்மயம் ஆக்கப்படுவதிலிருந்தும் காப்பாற்றப்படுவீர்கள். 2026 ஆம் ஆண்டு விரைவில் என குறிப்பிடப்பட்டிருந்தது. புதுவையில் தற்போது என்ஆர் காங்கிரஸ்- பாஜக தலைமைலியான அரசு மின் கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
அத்துடன் மின் துறையையும் தனியார்மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை சுட்டிக் காட்டி வரும் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து காங்கிரஸ் ஆதரவாளர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை காங்கிரஸ் கட்சியினர் நூதன முறையில் கொண்டாடினர்.
இதை பாஜக நிர்வாகிகள் சிலர், தமிழகத்தில் கூட தானே மின் கட்டணம், சொத்து கட்டணம் உள்ளிட்டவை உயர்ந்துள்ளது. ஏன் அந்த மாநிலத்திற்கும் இந்த பதாகைகள் பொருந்தும் தானே என கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ள நிலையில் அதுகுறித்து ஏன் தங்களது எதிர்ப்பை காங்கிரஸ் காட்டவில்லை என்ற கேள்வி எழுகிறது.
தமிழகத்தில் நிர்வாக சீரமைப்புக்காக கட்டண உயர்வு என்றால் புதுவையிலும் அதற்காகத்தானே உயர்ந்துள்ளது. இதில் பொதுமக்களை காக்க என்ன இருக்கிறது? என கேள்விக்கணைகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications