புதுச்சேரி அரசு ஹோட்டலை நான் விலைக்கு கேட்டேனா? "எல்லாமே பொய்.." விக்னேஷ் சிவன் திடீர் விளக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் கீழ் இயங்கி வரும் சீகல்ஸ் ஹோட்டலை சினிமா இயக்குநரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் விலைக்குக் கேட்டதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இது தொடர்பாக மீம்ஸ்கள் கூட இணையத்தில் உலா வந்தது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன் சில முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார்.
சிம்பு நடித்த போடா போடி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அந்த படம் அதிக வசூல் செய்யவில்லை என்ற போதிலும் விமர்சன ரீதியாகப் பலரது பாராட்டுகளையும் பெற்றது.

விக்னேஷ் சிவன்: அதைத் தொடர்ந்து நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை அவர் இயங்கியுள்ளார். இவர் நானும் ரவுடி தான் படத்தை இயக்கும் போது அந்த படத்தில் நடித்த நயன்தாராவுக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டது. பல ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இப்போது அவர் லவ் டூடே புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதற்கிடையே கடந்த வாரம் புதுச்சேரி சென்ற அவர் புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்தார். இந்த சந்திப்பு கொஞ்ச நேரம் மட்டுமே இருந்தது. இருப்பினும், அந்த மீட்டிங்கை தொடர்ந்து இணையத்தில் ஒரு தகவல் உலா வர தொடங்கியது.
பரவிய தகவல்: அதாவது புதுச்சேரி கடற்கரைச் சாலையில் அம்மாநில அரசின் 'சீகல்ஸ்' ஹோட்டல் இயங்கி வருகிறது. அந்த ஹோட்டலை விக்னேஷ் சிவன் ஏலம் கேட்டதாகச் சொல்லப்பட்டது. அரசு சொத்தை விற்க முடியாது என்று அமைச்சர் லட்சுமி நாராயணன் சொல்லவே, குறைந்தது ஒப்பந்த அடிப்படையிலாவது வாடகைக்குத் தருவீர்களா? என்று கேட்டதாக இணையத்தில் செய்தி பரவியது.
விளக்கம்: இதையடுத்து பலரும் இயக்குநர் விக்னேஷ் சிவனை கிண்டல் செய்யத் தொடங்கினர். பலரும் பல விதமான மீம்ஸ்களையும் கூட இணையத்தில் பகிர்ந்தனர். அவை டிரெண்டாகின. இந்தச் சூழலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். தான் அரசு ஹோட்டலை விலைக்குக் கேட்கவில்லை என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "பாண்டிச்சேரியில் நான் அரசு சொத்தை வாங்க முயன்றதாகப் பரப்பப்படும் செய்தியைக் குறித்துத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் பாண்டிச்சேரி விமான நிலையத்தில் எனது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி பெற அங்குச் சென்று இருந்தேன்.
என்ன நடந்தது: அப்போது மரியாதை நிமித்தமாக (புதுச்சேரி) முதலமைச்சர் மற்றும் சுற்றுலா அமைச்சரைச் சந்தித்தேன். இந்த சந்திப்புக்குப் பிறகு, அப்போது என்னுடன் வந்த உள்ளூர் மேனேஜர் அவருக்காக ஏதோ விசாரித்து இருக்கிறார். அதைக் காரணமே இல்லாமல் என்னுடன் இணைத்து தகவலைப் பரப்பி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் நீங்கள் உருவாக்கிய மீம்ஸ், ஜோக்குகள் மிகவும் வேடிக்கையாக இருந்தது. ஆனாலும், அவை தேவையற்றவை.. எனவே, இதைத் தெளிவுபடுத்த விரும்பினேன்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த விளக்கமும் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
-
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்? -
புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும்.. மாநில செயலாளர் திட்டவட்டம்! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு!












Click it and Unblock the Notifications