நம்பி ஏமாந்துடாதீங்க... முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சொல்வதை கேளுங்க

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் தவறு நடக்க வாய்ப்பு இல்லை என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில், ஒவ்வொரு வாக்கும் அவசியம் மற்றும் இந்திய தேர்தல் வரலாறு என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா கலந்து கொண்டு பேசியதாவது: மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறு நடக்க வாய்ப்பில்லை என்றார்.

former chief election commissioner navin chawla speech

மேலும், வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் தொடர்பான விவரங்களை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதற்கான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை தொடர்பு கொண்டே தெரிந்து கொள்ள வேண்டும். மாறாக, தவறான செய்திகளை உண்மை என்று நம்பி ஏமாந்து விடக்கூடாது என்றும் கூறினார்.

பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு பிறகு ராஜ் நிவாசிற்கு சென்ற நவீன் சாவ்லா அங்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது, இந்திய தேர்தல் தொடர்பாக தான் எழுதியுள்ள புதிய புத்தகத்தையும் நவீன் சாவ்லா கிரண்பேடியிடம் வழங்கினார் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+